அந்த ஒவ்வொரு ஊர் ஏரியால ஏதோ ஒரு வீட்ல 'தட' 'தட'னு தையல் மெஷின் ஓடற சத்தம் கேட்டுட்டு இருந்த காலம் அது, தென்னங்கீத்து டிப்போ இருந்த ரோடு, ஒன்னு இல்ல ரெண்டு டீ கடை, பூச்சி மருந்து கடை, லாட்டரி சீட்டு பெஞ்சு, ஜூஸ் கடை, காய் கறி கடை, பழைய பாணி பேக்கரி, அங்கயும் இங்கயும் ஒன்னு ரெண்டு ஹோமியோபதி அல்லோபதி டாக்டர் வீடு, சினிமா தியேட்டர் னு பஜார் இருக்கும். பெரும்பாலான கடையோட கதவு பல மடிப்பு பலகை தான்.
கிண்டி தொழிற்பேட்டை கூட (சென்னை) மெட்ராஸ்க்கு வெளியே தான்னு சொன்ன காலகட்டம். எக்ஸ்போர்ட் கம்பெனில வேலை சேர்ந்து சென்னை புற நகர் மக்கள் அவங்களோட வருமானத்தை உயர்த்திகிட்டு இருந்தாக. ஊருக்குள்ளேயே இல்லனா பக்கத்து ஊருல களை எடுக்கறது, நாத்து நடறது, அறுப்பு அறுக்கறது, நெல்லு குத்தறது, ஓலை முடையறது, புளி ஆயறது, சித்தாள் னு வேல செஞ்சி வருமானம் பாத்த பல பெண்களுக்கு இந்த எக்ஸ்போர்ட் வேல புதிய உலகத்த தந்துச்சு.
நிலையற்ற ஆண்களை கொண்ட குடும்பத்துக்கு இந்த வேல வாழ்வாதாரமா இருந்துச்சு. பஸ்ஸுக்காக ரோடுக்கு போனா கிட்ட திட்ட ஒரு பஸ் வர ஒரு மணி நேரம் ஆகும் அதுக்காகவே சில எக்ஸ்போர்ட் கம்பெனி பஸ் அணுப்பிட்டு இருந்தாங்க. எக்ஸ்போர்டுக்கு வேலைக்கு போகும்போது இவங்களோட ஆர்பரிப்பும் ஆரவாரமும் சித்திரை வெயில்ல சடசடனு மழை பெய்யறது போல இருக்கும், கம்பெனிலயிருந்து வரும்போது மழை ஒஞ்சி முடிஞ்ச பிறகு மழைல நடந்த விஷயத்த ரசிச்ச மகிழ்சியான முகத்தோடயும், உஷ்ண மறுதல தங்கமா அலுப்பு தட்டுன முகத்தோட சிலரும் , மழைல நடந்த நிகழ்வ 'கிசு கிசு'ப்போட சிலரும்னு பல பெண்கள் வீடு திரும்பினாங்க.
"அதாம்பா அந்த எக்ஸ்போர்ட்டுக்கு போதுல அந்த பொண்ணுடா அப்பா தான் அவுரு"னு சில பெண்கள் அவங்க வீட்டோடு அடையாளமா மாறுனாங்க. பொதுவா கிராமத்துல (எந்த சமூக குழுலயும்) ஒரு மனுஷன் எப்படி வித்தியாச படுறானோ அதுவே அவனோட அடையாளமா ஆயிடுது. செல்வாக்கு மிகுந்த ஆட்கள் அவங்களோட சாதி பெயர் அடையாளமா இருக்கும், அதே சாதியிலே இருக்கிற அடுத்த ஆளுக்கு கடை வச்சா கடைக்காருனு, சாமான் வித்தா சன்மான்கார்னு னு அவர் செஞ்ச தொழில் வச்சு அடையாளம் வச்சு கூப்பிடுவாங்க. இதுவே வேற ஊர்ல இருந்து அந்த ஊர்ல வந்தவங்கனா 'கோயம்பத்தூர்க்காரு மெட்ராஸ் ஆளுன்னு' அவங்க அடையாளம் ஆயிடும்.
இந்த சாதி மாதிரி தான் ஊர் விட்டு ஊர் வந்தவங்க நிலையும் பொறப்ப மாத்த முடியுமா? இல்ல முன்னோர் இருந்த ஊர தான் மாத்த முடியுமா? இல்லையே!!. என்ன தான் அமெரிக்காலேயே பொறந்து அமெரிக்காலேயே வளர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆனாலும் எங்க தமிழ் நாட்டை சேர்ந்த 'பெண்'னு நம்ம உழைச்சு வாங்காத வெற்றிய பெருமை கொண்டாடுறோம். ஒரு பெண் முன்ன வந்தா இன்னொரு சந்தோஷ படறதும் ஒரு நாட்டை சேர்ந்த ஒருத்தர் பல நாட்டு போட்டியாளர்களோட போட்டி போட்டு வெற்றி அடைஞ்சா அந்த நாட்டோட கோடில ஒருத்தர் சந்தோஷ படறதும் 'தான் ஆடா விட்டாலும் தான் தசை ஆடும்'ன்றா போல நடக்குது. ஆனா மொழி மதம் நாடு சாதி இனம் னு பாக்க தெரியாத குழந்தைகிட்ட நாம சிரிச்சா கண்ணம் இது, உதடு இது னு தெரியாத அந்த குழந்தை திருப்பி சிரிக்கும். நம்ம அழுதாலும் அந்த குழந்த பரிதாபமா பாக்கும் சில குழந்த அழவும் அழுதிடும். இது தான் இயற்க்கை அழகே!. ஏன் எந்த உயிரோடயும் இப்படி ஒரு கண்ணுக்கு தெரியாத உணர்ச்சி பிணைப்பு இருக்கு. அதே மாதிரி ஊர் பெருமை பேசி பெருமை அடையரதும் இல்ல சந்தோஷ படறதும்.
என்ன தான் இயற்கையா ஊர் பெருமை பேசறது இருந்தாலும் இதே நமுக்கு எதிரா இருக்கு. 1985லயே பல பேர் ஊர் விட்டு ஊர் மாறி குடி போனாங்க, ஆனா 1995ல தான் சென்னை புற நகர் மக்களுக்கு-பெண்களுக்கும் ஊர் விட்டு ஊர் போய் வேலை பாக்குறது ஒரு அனுபவமா இருந்துச்சி. அது வரைக்கும் (ஏன் இப்ப கூட) இப்படி குடி பெயர்ந்து வந்தா அவங்களுக்கு முதல் கிடைக்கற அடையாளம் 'ஊர் விட்டு ஊர் வந்தவன்'. ஒரு மூணு தலைமுறையா அதே ஊர்ல இருக்கிற மக்கள் கிட்ட இந்த பொருமல் இருக்கு பல சொல்லாடல் இது வெளிப்படும்
2. 'ஊர் விட்டு ஊர் வந்த உனக்கு இந்த ஊர் பத்தி என்ன தெரியும்...'
3. 'ஊர் விட்டு ஊர் வந்தவன் எல்லாம் ஆடுறான் வச்சிகரன் அவனுக்கு...'
அடையாள படுத்தி பேசறது இதுக்கு மட்டுமா
'பார்ப்பான் பையன் மீன் புடிக்கற போல' னு
ஏன் ஒரே மாவட்டத்துல ஒரே சாதியில குடி பெயர்ந்து வந்த குடும்பத்துக்கு கூட கொடுக்கற பெயர் ஊர் விட்டு ஊர் வந்தவங்க தான். அப்போ மும்பைல தமிழர்கள... ஏன் மத்த மாநிலத்து ஆள மராத்தி பேசுற அதே மாநிலத்து மக்கள் வேற்றுமை உணர்வோட பாக்குறதோ அமெரிக்கால மத்த நாட்டுலேயிருந்து குடி பெயர்ந்தவர்கள வேற்றுமை படுத்துறதோ சர்வ சாதாரணமான விஷயம் தான். (அமெரிக்க பூர்வ குடி செவ்விந்தியர்கள தான் இன்னைக்கு இருக்கிற இங்கிலாந்து பேர பிள்ளைகள் இல்ல!!!) ஆனா அது வெறுப்பா மாறி காழ்ப்புணர்ச்சியால அடிதடி வரைக்கும் போகுது.
No comments:
Post a Comment