"உன்ன வேற ஸ்கூல்ல சேக்க போறோம்.., அக்கா அண்ணா படிக்கிற ஸ்கூல்ல படிக்க மாட்ட புது ஸ்கூல் அக்கா அண்ணா ஸ்கூல்ல விட சின்னது.. ஆனா அம்மா உன்ன நல்லா படிக்க வைப்பேன்..! பின்னாடி நீ உன்ன மட்டும் சின்ன ஸ்கூல்ல படிக்க வச்சிட்டோம்னு கஷ்ட படக்கூடாது.! சரியா ?!" னு கேட்க நானும் "நான் கஷ்ட படமாட்டேன். நான் நல்லா படிப்பேன்!"னு எங்க அப்பா அம்மாக்கு பெரிய உதவி பண்ண சந்தோஷத்தல தலை ஆட்டினேன். அப்ப எங்க அப்பா அம்மா சத்தமில்லாம பெருமூச்சு விட்டதையும் பாத்து சந்தோஷ பட்டேன்.
கூடவே "புது ஸ்கூல் கூட கிறிஸ்டியன் ஸ்கூல், இங்க மாதிரியே அங்கேயும் நல்ல பழக்க வழக்கம் சொல்லி கொடுப்பாங்க நல்லா படிக்க வைப்பாங்க"னு எனக்கும் அவங்களுக்கும் நம்பிக்கை கொடுத்துகிட்டாங்க.
அப்பவே ஏசுவும் ஒரு கடவுள் னு ஏற்கனவே இருந்த சிவன், பிள்ளையார், பெருமாள், அனுமான், கங்கை அம்மன் ன்ற எனக்கு தெரிஞ்ச கடவுள் லிஸ்டுக்கு வந்து சேந்தார். என் அறிவு சின்ன சின்னதா வளர்ந்த மாதிரியே என் ஊரும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்துனால கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டு வந்துது
கம்பம் நட்டு வொயர் வலிச்சு கரண்ட் கொடுத்திருந்த சில தெருமுக்கு கமபத்துல சோடியம் லைட் வந்துச்சு அதே சமயம் முச்சந்தியில முட்ட செய்வினை வெக்கிறவங்கலையும் அந்த மஞ்சள் வெளிச்சம் துரத்திச்சு.!
தெருக்கு ஒரு பக்கம் கரண்ட் கம்பம் நிக்க இன்னொரு பக்கம் மூணடி பள்ளம் போட்டு ஜோட்தலை தாட்டிக்கி வெள்ள பைப் பொதைச்சு இரும்பு கொழாவ கரண்ட் கம்பத்துக்கு துணையா நிக்க வச்சாங்க. அது நாள் வரைக்கும் குடி தண்ணிக்காக கங்கை அம்மன் குளத்துக்கும் துணி துவைக்க காவாய்க்கும் நடந்த என் அம்மாவுக்கு இது ஒரு நிம்மதி பெரு மூச்சா இருந்துச்சு. ஆனா என்னோட கிராம சுற்றுலா தெரு முச்சந்திலேயே முடிஞ்சி போச்சு. அது நாள் வரைக்கும் காவா தண்ணில மீன் குட்டி பாக்குறது, அல்லி தண்டுல காத்து ஊதி விளையாடுறது எல்லாம்.. கொழா இல்ல ட்ரன்ஸ்பார்மர் ரிப்பேர் ஆன புண்ணியத்துல அபூர்வமா மறுபடியும் விளையாடுற வாய்ப்பு கெடச்சது. இருந்தாலும் எங்க அம்மாவுக்கு முழங்கால் தண்ணியில பாவாடைய தூக்கி சொருகி துணி துவைக்கிற அவஸ்த இல்லாம இருந்துச்சு.. அந்த கொழா புண்ணியத்துல!.
அந்த குட்ட கொழா பக்கத்துலயே பணங்கழியாட்டம் சிமெண்டுல பெயர் பலகை வெச்சு மஞ்சள் பெயிண்ட் அடிச்சு கருப்பு பெயிண்ட்ல தெரு பேரு எழுதி வச்சாங்க. அது நாள் வரைக்கும் ஒத்தவாடை தெருனு கூப்ட தெருவ காமராஜர் தெருனு பேர் மாத்திட்டதா சந்தோஷ பட்டாரு அப்பா. இனிமேல் எவனும் நக்கலா 'ஒ.த்தவாடை ஒ.த்தவாடை'னு ரோட்டுல கூப்பிட மாட்டான்னு கொஞ்சம் சந்தோஷம் தான். என்னதான் அப்டி கூப்பிட்டாலும் அவரு அத பெருசா எடுத்துக்கினது இல்ல.
நாடார் கடை இருந்த தெருவ காமராஜர் தெருன்னு மாத்துனது போலவே முன் தெரு பேரு 'ராமதாஸ் தெரு'னு பின் தெரு 'ஏழுமலை நாயக்கர் தெரு' அதிமுக பிரமுகர் இருந்த தெரு பேர் 'MGR தெரு', காங்கிரஸ் கட்சிக்காரர் இருந்த தெரு 'நேரு தெரு', திமுக தலைவர் இருக்கிற தெரு 'கலைஞர் தெரு', அதிமுக தலைவர் இருந்த புது ஏரியா 'MGR நகர்' னு பேர் வெச்சதாவும் சொன்னார்.
அதேபோல முக்கியமா பஸ் ஸ்டாண்ட் ஒட்டி இருக்குற 'காலணிய காலணினு கூப்ட கூடாது' ஆனா 'அம்பேத்கர் நகர்'னு பேர் மாத்திட்டாங்கனு சொன்னார். 'காலணி னா என்ன அப்டி ஏன் கூப்பிட கூடாது?' னு கேட்டதுக்கு...
அவங்க பாட்டி வீட்ல மாட்டு வண்டிகள பொறுப்பா பாத்துக்கிட்ட 'வரதன்' என்கிற 'வரதர்' கதை பத்தி சொன்னாங்க. அவரு குடிச்ச காபி டம்ளார நெருப்புல வாட்டி எடுத்த பிறகுதான் வீட்டுக்குள்ள வச்சதாவும் ஆனா அவுரு கொடுத்த பணத்த அப்படியே அலமாரில வச்சத பாத்து பணத்துக்கு தீட்டு கெடையாது னு கேட்டு நையாண்டி வழியா மட்டும் எதிர்த்தத பத்தி சொன்னாங்க. அப்பிடியே தலைமுறை தலைமுறையா எப்படி சக மனுஷன்ல ஒரு பகுதியினர தவறுதலாவும் திட்டமிட்டும் மனித தன்மையற்ற முறைல ஒதுக்கி வச்சாங்கனு கொஞ்சம் பெருசாவே சொன்னாங்க.
ஆனா ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒரு விதமான கிருமி இருக்கும் அந்த கிருமிக்கு பழக்க படாதவங்க கிட்ட போகும் போது நோய் வரும் ஆனா கொஞ்ச நாள்ல சரியா போயிடும்னு சொன்னாங்க.
ஒரு நாள், என் நண்பன் என் வீட்டு விசேஷத்துக்கு வந்திருந்தான். எப்பவும்போல சாப்பிடுமுடிச்ச பிறகு என் வீட்ல இருந்தவங்க என் நண்பனோட பேச ஆரம்பிச்சாங்க சில கேள்வி பதில் னு பேசிகிட்டு இருக்க.. "உன் ஊரு என்னப்பா"? னு கேட்க அவனும் அவன் ஊர் பேர சட்டுனு சொன்னான், உடனே "ஊர்ல எங்கப்பா?" னு கேட்க கொஞ்ச மூச்செடுத்து அவன் ஏரியா பேர சொன்னான். "எதுக்குமா நீ துருவி துருவி கேள்வி கேட்குற" ன்றா போல பாக்க அவங்களா எனக்கு பதில் சொல்லாம என் ஃபிரண்டு கிட்ட "அந்த ஊர்ல எங்களுக்கு சொந்தக்காரங்க இருக்காங்க"னு சொல்லி நகர்ந்தாங்க
என் நண்பன 'அதிகமா கேள்வி கேட்டுட்டாங்க' ன்ற எண்ணமும் அவன் கஷ்ட பட்டு பதில் சொன்னான் ன்ற நினைவோடு அந்த நாள் முடிஞ்சது.
வெளி மாவட்டத்துல நான் தங்கியிருக்கும் போது, என்னோட நண்பர் ஒருத்தர் அவர் வீட்டுக்கு என்ன கூப்பிட்டு போனாரு. வீட்குள்ள போகும்போதே "வாங்கப்பா" னு அவங்க அம்மா கூப்பிட, அந்த மாவட்டத்துக்கே உரிய பாணியில வார்த்தைக்கு வார்த்த மரியாதையும் அன்பும் கலந்து பேசுனாங்க.என்னதான் பொதுப்பண்பு னு இருந்தாலும் அதுலயே பல மாறுதலுக்கு சில விதிவிலக்குகாக நம்மல நாமே தயாரா இருக்க வேண்டியிருக்கு. அவங்க கேட்ட "நீங்க .."? ன்ற அடுத்த கேள்வி என்ன சில வினாடி பேச விடல, நல்ல வேளையா என் நண்பர் "அவன் என் ஆபீஸ் ஃபிரெண்ட், 4 வருஷமா தெரியும்"னு திசை மாத்தினார்.
என்னதான் நம்ம நட்பு வட்டாரத்துல பாகுபாடு இல்லாம பழகினாலும் நம் முன் தலைமுறையும் ஏன் நம் தலைமுறையில் கூட ஒரு மனுஷனா வகைப்படுத்தி 'இந்த ஏரியா ஆளு இப்படித்தான் அந்த ஆளுங்க அப்டித்தான் இருப்பாங்க' னு முடிவு காட்டுறாங்க. யோசிக்கறது கஷ்டமான விஷயமான தான், அதனாலேயே முடிவு கட்டுறாங்க.
அப்படி முடிவுக்கற்ற ஒரு விஷயம்தான் அம்பேத்கார் நகர்னாலே ஆதி திராவிடர் இருக்கிற இடமா பாக்குறது. இந்த நிலை மாறி ஊருக்கு நடுவுல ஒரு முக்கிய தெரு பேர் 'அம்பேத்கார் தெரு' னு பேர் வைக்கணும் இல்லனா மாத்தனும். ஏன் புது புது நகர் உருவாகிக்கிட்டு தான் இருக்கு ஆனா அந்த நகர் பேர் எல்லாம் ஒன்னு ஆளுங்கட்சி ஆளுமையோட பேர் இருக்கும் இல்லனா தீடிர் நகர், புது நகர், மாடர்ன் அவென்யூ னு ஒரு பொது பெயரா இல்ல ரஹீம் நகர், ராம் நகர், டேவிட் நகர் னு மதம் சார்ந்த ஆளுமை பேரா இருக்கும்.
"அடேய் அப்ப அம்பேத்கார் பேர் ஆதி திராவிடர்காக நேந்து விட்டுட்டோமா"னு கேக்க தோணுது. "ஏன் பஜார் வீதி பீமாராவ் வீதி ஆகட்டும், கடை வீதி கக்கன் வீதி ஆகட்டும்". சமத்துவ சுடுகாடுக்காக இலட்சங்கள் பரிசளிக்கும் இன்றைய தமிழக அரசு வாழும்போதே சமத்துவம் காண வழி செய்யட்டும் நாம துணை நிற்போம்.
பேர் மாத்துனா மட்டும் முழுமையான சமத்துவம் கிடையாது தான் ஆனா எதிர்ப்ப தாண்டி ஒருங்கிணைந்து ஒரு நல்ல மாற்றத்த தர முடியும் ன்ற அனைவருக்கும் தலைவரா இருப்பார் நம்ம அம்பேத்கார். இறுதியில், ஒரு சில ஜாதி மட்டும் ஒரு எடத்துல ஒதுங்கி இருக்கிறாங்க நிலைமை மாறி ஊர் முழுக்க மக்கள் இருக்காங்க அவங்களா சொல்லாம அவங்க ஜாதி தெரியவும் தேவை இல்லன்ற நிலை வரனும்.
"தேவை அதிகார பரவல் மட்டுமல்ல!
வாழிட பரவலும் தான்"
என்னதான் அம்பேத்கர் இயற்றின அரசியல் சாசனத்தின் அடிப்படைல உருவான சட்டங்கள் மூலம் பயன்கள் எல்லாம் ஊருக்குள்ள வந்து பயன் தந்தாலும்.. ஊருக்கு நடுவே ஒரு அம்பேத்கர் தெரு வரவில்லை இன்றும் என் ஊரில்
ஊருக்கு நடுவே வேண்டும் ஒரு அம்பேத்கார் தெரு!
"ஒரு சாதிக்கு மட்டுமா தலைவன் நீ
இந்நாட்டு குடியரசின் எழுத்தாணி நீ
சாதிய சுவர்கள் கற்களால் மட்டுமல்ல..
பெயர் பலகையாலும் கட்டப்பட்டுள்ளது!
கக்கன் ஜி நீங்கள் அம்பேத்கர் நகரில்
ஒண்டி குடித்தனம் நடத்தியது போதும்
ஒரு வேளை... உங்களுக்கும் பணம் இல்லையோ!
ஊர் நடுவே உங்கள் பெயர் குடியேற!!
சரி அரசாங்கம் கொடுக்கட்டும் உங்களுக்காக"
"ஜெய் பீம்! அன்பு பரவட்டும்.. தோழமை நிலைக்கட்டும் நம்மிடம்!!"
அருமை!!
ReplyDeleteதேவை அதிகார பரவல் மட்டுமல்ல!
ReplyDeleteவாழிட பரவலும் தான்
Vera maari
சூப்பர் நண்பா 👍👍
ReplyDeleteSuper dinesh
ReplyDeleteஅருமை தோழர் 👍🏻👍🏻சமத்துவம் பரவட்டும், சகோதரத்துவம் தொடரட்டும், சமூகநீதி நிலையட்டும்✨️✊🏻✨️தோழர்
ReplyDeleteஅருமை தோழர் 👍🏻👍🏻சமத்துவம் பரவட்டும், சகோதரத்துவம் தொடரட்டும், சமூகநீதி நிலையட்டும்✨️✊🏻✨️தோழர்.
ReplyDeleteIthe podru ondru ethirparkalam viraivil
Delete