Monday, September 23, 2024

காம்பௌண்டு வீடு

                                            சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி அப்பாவோட வீட்டுக்கடனை அடைச்சி முடிச்ச பிறகு அண்ணனோட வீட்டுக் கடன் வாங்குவதற்கு சந்தோஷமா தயாராக இருக்கும் ஆமா நம்மள நம்பி கடன் தருவது ஒரு நல்ல விஷயம் தானே அன்னைக்கு அப்பகட காவி கட்டின வீடு அப்புரோவல் பிளான் பெரிய எதிரி சீட்டில் சென்னை ஏர்போர்ட் அல்ல இரண்டு செராக்ஸ் போட்டு தெரிஞ்ச பில்டர் பிளான்

பில்டர் பேனர்கட்ட எடுத்துட்டு போய் இருந்தோம் அந்த ஜெராக்ஸ் பார்த்துட்டு
ஒரிஜினல் காப்பி கொடுங்க அப்படின்னு கேட்டார் இந்த ஒரிஜினல் வாங்கி பார்த்த பிறகு "பரவாயில்லையே நிறைய காலியிடம் இருக்கே..! பெருசா கட்டலாமே..!"ன்றார்

இல்லைங்க..! மாடியில் வீடு கட்ட தான் இப்போ பிளான் பண்ணிட்டு இருக்கோம் மிச்ச இடத்தை பியூச்சுர் யூஸ் பண்ணிக்கலாம்னு வெச்சிருக்கோம்.

ஓஹோ.. சரி.! னு சொல்லி பிளான் போட்டு கொடுத்தாரு அப்படியே வாங்கிட்டு வந்துட்டோம். அன்னைக்கு நைட்டு அந்த பில்டர் பிளான் போடும் போது எங்க இடத்தை 'எவ்ளோ பெரிய இடம்'னு சொன்னதை இருபது நிமிஷம் பேசி சந்தோஷப்பட்டு இருப்போம். இருக்க ஒரு இடமும், நல்ல வீடும், தண்ணிக்கு ஒரு கிணறும் அமையரளவு அப்பா அம்மா எடுத்து அந்த முயற்சியை அந்த நைட்டு, அந்த வாரம் முழுசா பேசி தீர்த்தோம்.

ஆறில் ஒரு பங்கு வீடு மாடிப்படி, பால்கனி, வீடு னு அமைய மீதி 5 பங்கு கிணறு மாமரம் எலுமிச்சை செடி வாழை மரம் ரோஜா வாழை, கனகாம்பரம், கருவேப்பிலை, இரண்டு மூன்று வேப்ப மரம்னு  செழிச்சு கெடந்துச்சு காலையிலிருந்து இந்த செடிங்க நடுவுல வந்து அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து கொண்டே அந்த பிரஸ் பண்ணிட்டா காலை நல்லா ஆரம்பிக்கும்.

அப்ப இருந்த நேரத்தில் எனக்கு கல்யாணம் நடக்காதுனு யோசிச்சு இல்லையோ கண்டிப்பா வீடு கட்டுவேன்னு யோசிக்க கூட இல்ல - வேற ஏதோ பெருசா செய்ய போறோம்னு  இருந்தாச்சு. ஒரு வேலை வீடு கட்டுறத சினிமால ஹீரோயிசமா காமிச்சா அத பத்தி யோசிச்சி இருப்போம் போல..!

பல மாசமா பேசி வச்சி நடந்து இருந்தாலும் அந்த விஷயம் மட்டும் சட்டனு நடந்ததா போல நெனச்சுக்கிட்டு இருப்போம். அப்படித்தான் அன்னைக்கு வீடு கட்ட இடத்தை அளக்க அடுத்த வாரம் மேஸ்திரி வர வைக்கணும்னு முடிவு எடுத்து அந்த 6 பங்குல 5 பங்கா இருந்த மரத்தை எல்லாம் வெட்ட சடார்னு ஆள் வந்து நின்னாங்க. 
 
அந்த ஆளுக்கு வந்து 'என்னமா மாமரம் பால் மரமாச்சே இது அப்படியே வெட்டக்கூடாது'னு சொல்லி மஞ்சள் குங்குமம் எடுத்து வரச்சொல்ல அப்படியே ஒரு டம்ளர் பாலையும் கொண்டு வர சொன்னாங்க. வீட்டுல இருக்க எல்லாரையும் வரச் சொல்லிட்டு பால்மரத்த வெட்டுறதுக்கு முன்னாடி மஞ்சள் குங்குமம் வெச்சு கற்பூரம் ஏத்த சொல்ல அம்மாவும் அப்படியே செஞ்சாங்க.! அது என்னவோ வாரா வரம் சட்னிக்கு தேங்காய் தந்த தென்னை மரத்தை பெருசா எடுத்துக்கல ஆனால் வருஷத்துக்கு  ஒரு தடவை மாங்க காய்க்கிற இந்த மாமரத்துக்கு மட்டும் பூஜை எல்லாம் செஞ்சு அதை வெட்ட தயாரா இருந்தாங்க 

சரி சாமி கும்பிட்டாச்சு இந்த மரத்தை வெட்டினால் பாவம் இல்லை என்று சொல்லி எல்லா மரத்தையும் வெட்டி தரைமட்டமாக்கி வீடு கட்ட தயாராகிட்டோம்.

அன்னைக்கு அந்த மேஸ்திரி அளந்து கொடுத்த ஆறு மாசத்துலேயே மாமரம் இருந்த இடத்தில் வீட்டோட சாமி அறையும் எலுமிச்சம் இருந்த இடத்திலேயே படுக்கை அறையும் ரோஜா இருந்த இடத்துல பால்கனினு எல்லாம் கட்டிடமாக மாறிடுச்சு 

வீட்டுக்கு ஒரு மரம் வேணும்னு சொல்லி என் வீட்டு செவுத்துல மரத்தை சிமென்டுல வரஞ்சிட்டேன. மாற்றம் ஒன்று தானே வாழ்க்கை ஆமா உயிர் உள்ள மரம் எல்லாம் போயிட்டு இன்னிக்கு செவுத்துல சிமெண்டு மரமா நிக்குது 

அப்படியே இந்த வீட்டோட பரனை போடும்போது ஒன்றை அடி வெச்சா பக்கத்து வேலைக்கு போகும்னு மேஸ்திரி சொல்ல அதுக்கு கிட்டத்தட்ட குடும்பமா சேர்ந்து என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது எது பிரச்சினையா இருக்காதோ அத பண்ணிட்டு போங்கனு சொல்லி முடிவெடுத்தாச்சு

அப்பத்தான் நிறைய இடம் இருக்குனு சொன்ன அந்த பில்டர் ஞாபகம் வந்தது நிறைய இடம் இருந்து என்ன இடத்துக்கு ஏத்த மாறி வீடு கட்ட மனசில்ல/ மனசுக்கேத்த இடம் இல்ல. அப்படி யோசிச்சிட்டு பைக் எடுத்துட்டு கிளம்பிட்டேன். ரோட்டுல போகும் போது 600 சதுர அடி 800 சதுர அடி 1200 சதுர அடியில் மனைகள் விற்பனைக்கு வரும் விளம்பரம் பார்க்கும்போதுதான் தோணுது இந்த நடுத்தர வர்க்கத்துக்கு இது (காம்பௌண்ட் வீடு ) போதும் அப்படின்னு சொல்ற மாதிரி இருந்திச்சி. ஒருவேளை மரம் செடி வச்சுக்கிற அளவுக்கு நமக்கு அறிவும் திறமையும் இல்லையோ இல்ல அந்த அறிவையும் திறமையையும் விலை பேசி விக்கிற அளவுக்கு திறமை இல்லையேன்னு யோசிக்க வைக்குது. இன்னொரு பக்கம் யோசிச்சா அந்த மரம் செடிகள் எல்லாம் நம்ம வீட்டிலேயே இருக்கணும் னு ஆறடி வீட்டை சுத்தி விட மனசு இல்லையோனு யோசிக்க தோணுது.

சிரி ஆகுற வழியை பார்ப்போம்னு நம்ம விளையாட காலியிடம் இருந்ததுபோல நம்ம குழந்தைகள் தெருவுல இருக்க எடத்துலயும் / ஏரியால ஒரு மூளையில் இருந்த பூங்காவா சரிசெய்ய கிளம்பினேன்.

Saturday, September 21, 2024

காந்தியும் டிஷ்வாஷரும்


                                       
source: openaiart 

                                ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில "ஸ்கூலுக்கு போறப்ப சாமி கும்பிட்டுட்டு போடா", "ஸ்கூல் முதல் நாள் போறப்ப நல்ல நேரம் பார்த்து போடா" ன்னு  சொல்ற குடும்பத்தில பொறந்த பையனுக்கு இருக்கிற பெரிய பயம் என்னன்னா... எப்படியாவது தன் சொந்த முயற்சியால வேலை கிடைக்கணும்னுறது. 
 
                                  அப்படி வேகமா வேலை கிடைக்கலனா... உடனே அம்மா தனக்கு தெரிஞ்ச ஜோசியரிடம் இல்லனா தன்னுடைய அக்கா தங்கச்சி நல்ல ஜோசியர்னு  யார் சொல்றாங்களோ.! அந்த ஜோசியர் கிட்டே போய் ஒரு தாயத்து வாங்கி வாங்கிட்டு வந்து கட்டிவிட்றுவாங்க அப்ப அந்த தாயத்து கட்டி நமக்கு கொஞ்சம் மாசத்திலே வேலை கிடைச்சிருச்சு னா அந்த ஜோசியர்னால தான் இந்த வேலை கிடைச்சிடுச்சுன்னு சொல்லி  சொல்லியே அம்மா அந்த ஜோசியருக்கு பிராண்ட் அம்பாசிடரா மாறிவடுவாங்க.!  அப்படி மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.! ஒருவேளை படிச்சு முடிச்ச பிறகு நாலு மாசமா 'பீஃபா' வீடியோகேம் விளையாடுதுனால, எனக்கு தாயத்து கட்டி விடலையோ..! சரி 16 வருஷ படிப்புக்கு 4 மாசம் லீவு நமுக்கும் வேணும் தானே..!

ஆனா இந்த தாயத்து கட்டிறதுக்கு முன்னாடி 10 வருஷம் படிச்சதுக்கு கிடைச்சதாவோ இல்ல கொறஞ்சது 10 லிருந்து 50 ரெஸ்யூம் கொடுத்து இன்டெர்வியூக்கு போனதுக்காக வேலை கிடைச்சதுனு சொன்னா அது நம்ம மனசுக்கு ஆறுதலா இருந்திருக்கும்... ஆனால் தாயத்தால வேலை கெடச்சதின்னு  சொல்லும்போதுதான் நம்ம மனசுக்கு வருத்தமா இருக்கு.
 
அது என்னவோ அதே குடும்பத்தில் அக்காக்கோ  தங்கச்சிக்கோ வேலை கிடைக்கலனா முயற்சி பண்ணினா வேலை கிடைச்சுடும்னு சொல்லி ஆறுதல் சொல்றவங்க கொஞ்ச வருஷத்துல, வேலை கிடைக்கிதோ இல்லையோ தாயத்து கட்றாங்களோ  இல்லையோ ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டிடணும்னு முடிவு பண்ணிடுறாங்க. இந்த தாயத்துக் கட்டிக்கொண்டு வேலைக்கு போகணும் என்ற கட்டாயம் எல்லாம் ஆண்களுக்கும் வேலை கிடைக்கலன்னா (/கெடச்சாலும்) சீக்கிரமா கல்யாணம் கட்டிக்கணும் கட்டாயம் பெண்களுக்கு இருக்கத்தான் செய்யுது.

கல்யாணம் பண்ணனும்னு பேச்சு எடுக்கும் போது தான்... நம்ம சுத்தி இருக்கிறவங்களோடு 'பெண் கல்வி', 'பெண் வேலை'ன்ற யோசனை அப்பட்டமா தெரியுது. பெரும்பாலும் இவங்க சொல்றது எல்லாம் 'பெண் கல்யாணம் ஆன பிறகு பெண்கள் தங்களுடைய வேலையை விட்டுடுவாங்க', 'பெண் சம்பாதியம்  வீட்டோட மேல் வருமானம்', 'பெண்கல்வி ஒரு பாதுகாப்பு மட்டும்'தான்ற நினைப்பு இருக்கத்தான் செய்யுது. பொதுவெளியில பெண் கல்வி, பெண்ணின் வேலை, பெண்ணின் பொருளாதார சுயச்சார்பு பத்தி பரவலா பேசினாலும்  நடைமுறைல கொண்டுவரதுக்கு நெறைய மெனக்கெட வேண்டியிருக்கு.

இப்படிப்பட்ட செயல் மற்றும் எண்ணங்களை பின்னணியில் என்ன இருக்கும் யோசிச்சு பார்த்தா நம்ம வீட்ட பாத்துகிறது, சமையல் செய்யறது குழந்தைகள கவனிச்சிக்கிறதுனு பலவித பொறுப்ப பெண்கள்தான் பாத்துக்கிட்டாங்க-பாத்துக்கிறாங்க. கழுதைப்புலி, கடல்குதிரை போன்ற உயிரினங்கள யோசிச்சு பாத்தா சமூக மாற்றம் வருமோ என்னவோ!

இந்த வீட்டு வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும்னு  சிக்கி தவிகரத்திலிருந்து பெண்களை கணவனோ, மாமியாரோ இல்ல அந்த குடும்பமோ விடுதலை செய்யுதோ இல்லையோ மிக்ஸி கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிஸ்வாஷேர், கிளீனர் ரோபோ போன்ற கண்டுபிடிக்கிறதுதான் திரும்பத் திரும்ப அதே வேலையை செய்யற கட்டாயத்தில் இருந்து விடுதலை செஞ்சியிருக்கு.
 
பெண்கள மட்டும் விடுதலை செய்யல!  பெண்ணை சரிசமமா நடத்த நினைக்கிற நடத்துற ஆண்களையும் "நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா" ன்ற வசனத்திலிருந்தும் விடுதலை செஞ்சியிருக்கு.
 
தான் வேலைய தானே செஞ்சுகிட்டா! யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம் என்று காந்தி முறை தான் ஞாபகம் வருது 
 
 

Friday, September 20, 2024

Will Chennai Bus be Tamil Nadu Bus?

 



            Are you happy with Indian 2? At least, it would help if you were pleased with the Indian 1, to bring back the goosebumps moments. I hope every kid in 90's, would have tried putting their index finger on top of the middle finger and punching someone and twisting their wrist. It's an "Indian" film effect after seeing the Indian movie, everyone
becomes a fan of the 70-year-old and always remembers this moment and the leather belt and the small dagger and varma kalai.

When we turn back and see the film, is corruption alone a problem? The greed of the bureaucrats is a real problem there. What else worsens the situation there? One of the root causes is the rigid administration policy and lack of transparency.

In that particular movie Indian 1, the crux of the story happens around a home surrounded by a paddy field far away from Chennai. The son of Indian Thatha moves from the village to the city, searching for a job. After 30 years, we don't see any paddy fields in the Thirumullaiyvoyal (Indian) village, it is no longer a village by ecosystem. It's full of concrete houses and it got its Hospital also.

Many people have the facilities (buses, schools, hospitals, and workplaces) in their places due to technology and globalization. Besides the availability of opportunities, people are moving from many villages of Tamil Nadu to the state capital Chennai, in search of jobs and a better lifestyle.

When we take a facility to compare their standards in Chennai and other districts I always think of road and transport which is common to all even now.

Let's compare the MTC buses and other bus corporations today, the people of Chennai can know where their bus is. Whether the official app is working or not is a different question, but at least we could see the API is working in Challo or Google Maps. It is also another question, whether the buses are adequate or inadequate, for the Chennai population. But one more question arises here, is MTC the only corporation used in Tamil Nadu? Shouldn't the same facility availed by the rest of the consumers of other corporations? The government is concentrating only on Chennai.

We see the urbanization effect here. But the government must cater to opportunities in time. Hopefully, we will see the same facilities in all corporations from Chennai to Kanyakumari. If we cannot do that, we may see a rampant inflow of people from other districts into Chennai.  Now, we are not thinking of moving the IT companies to other areas, but why is bare minimal information not catered to people from different places? Other districts don't have any cell phone towers or don't use Cell phones that frequently. Oh my gosh. Now India started to surpass the US and China (definitely not in Olympics/patent filling but we do in Asian Games hockey) in terms of mobile phone penetration.

The current ruling party of TN must remember the fall of UPA2. Even during the age when the information was very accessible to every person, the UPA2 government followed the papers and failed to cater details to citizens.


And the BJP came in and fantastically used the social media platforms. And they are keeping up fast with the people. It could be in the Bitcoins or the digital currency, they are up to the technology. It's another fact of doing the hate politics, but you have to appreciate the skill and the penetration they are doing. To your wonder even Communist (CPIM) deployed Samata AI for election analysis. Especially if the DMK fails to do this, we could see the fate of the Congress. It will taste a similar bitter result if fails to cater needs of the people. I'm not sure whether it could answer the dynasty politics, but I'm sure it could immediately address the small issues. This could counter the urbanization effect.