Monday, October 21, 2024

கிழக்கு மேற்கு

source:Needpix.com
 
என்னதான் நம்மல சுத்தி அந்த விஷயம் இருந்தாலும் அதுபத்தி நெறைய யோசிக்கவே மாட்டோம். அது அப்படியேதான் இருக்கு அதுல என்ன 
அப்படின்னு எடுத்துப்போம். பொதுவா நம்ம எப்படி யோசிச்சி இருப்போம்னா ஒரு வீட்ல அம்மா வேலைக்கு போகாம இருந்தாங்கன்னா குழந்தைங்க யோசிக்காம அப்பா தான் வேலைக்கு போவாங்க அப்படின்னு அம்மா வீட்ட பாத்துப்பாங்க அப்படின்னு ஒரு அனுமானத்துக்கு வந்துருவாங்க திடீர்னு ஒருநாள் யாரோ ஒருத்தரோட அம்மா வேலைக்குப் போறத பாக்கும் போது அவங்களுக்கு அந்த ஒரு விஷயம் புரியும் அம்மாவும் வேலைக்கு போகலாம்னு.

இதுபோல சின்னச் சின்ன விஷயங்கள் சின்ன வயசிலே உடையது ஆனால் நம்மள சுத்தி இருக்கிற பல விஷயங்கள் இங்க என்னதான் பெரியவர்கள் ஆனாலும் உடையறது இல்லை.

அதைப்போலத்தான் ஆரம்பத்திலிருந்தே நாங்க படிச்ச இடத்துக்கு பேரு கீழ் படப்பை.! நிறைய பஸ் வேணும்னா நாங்க மெயின் பஸ் ஸ்டாண்டிற்கு மேல் படப்பைக்கு  போகணும். அது என்னமோ வசதி வேணும்னா கூட மேலைநாட்டுக்கு போறா போல எங்களுக்கு பஸ் வேணும்னாலும் அந்த மேல் படைப்பைக்கு போனா தான் பஸ்ல சீட்டு கிடைக்கும்.

இந்தக் கீழ் மேல் ன்ற அடை மொழியெல்லாம் பெருசா யோசிச்சதே இல்ல. கீழ்ப்பாக்கம் அப்படின்னாலே நமக்கு என்னவோ பைத்தியக்கார ஹாஸ்பிடல் தான் ஞாபகம் வருது. ஆனா மேல்பாக்கம்னு ஒண்ணு இருக்குமான்னுக்கூட யோசிக்கறது இல்ல.

முன்ன சொன்னது போல ஒருநாள் வேலைக்கு போயிட்டு இருக்கும்போது, வண்டலூர் கேளம்பாக்கம் ரோட்டுல திடீர்னு மேல்கோட்டையூர் வழியா கீழக்கோட்டையூர் நோக்கி நகரும்போது திடீர்னு ஒரு மேடுபள்ளம் வரும் அதுலயும் எதிர் வெயில் ஹெல்மெட்டுக்குள்ள கண்ணாடி வழியா எகிறி குதிச்சி மூக்க சூடேத்தி நம்மள சோதிக்கும்போது தான் மூளையும் சூடாகி வேலைய காட்டுச்சி 

அப்ப சேதுபதி எழுதின 'ஊரும் பெயரும்' என்ற புத்தகம் பெயர் எல்லாம் எனக்கு தெரியாது ஆனால் டென்ஷன் இல்லாம நிறைய யோசிக்க தான் தெரியும்

அப்படி யோசிக்கும் போதுதான் இந்த பேர் ஏதோ ஒன்னு நம்மள திசைகளை நோக்கி யோசிக்க வச்சிது. கிழக்கு நோக்கி இருக்கிறது எல்லாமே கீழ/கீழ், மேற்கு நோக்கி இருக்கிறது எல்லாமே மேல்/மேலனு இருக்கு. இது இன்னும் கொஞ்சம் ஆழமா பார்த்தோம்னா இதுநாள் வரைக்கும் திசைகள ஒரு இடுகுறிப் பெயரா யோசித்து இருந்த நாம அதையெல்லாம் இப்போ ஒரு காரணப் பெயரா யோசிக்க தோணுது.

வடக்கு-தெற்கு அப்படின்னு பார்க்கும்போது 
                திடீர்னு ஒருநாள் 'பியர் கிரில்ஸ்'ஓட 'Man vs Wild' நிகழ்ச்சியை பார்த்துட்டு இருந்தேன். 'நாங்க ஏன்டா நடு ராத்திரில அந்த காட்டுக்கு போக போறோம்'ன்ற போல தான் இருக்கும் அனாலும் அதை பாக்க, ஒரு அடிப்படையான விஷயத்தை கேட்கும் போது ஒரு அலாதி சந்தோஷம் எனக்கு. 
           அப்படி என்னனா வெட்ட வெளியில ஈரப்பதமான எந்த எடத்தலயும் இருக்க ஒரு கல்லுல பச்சை பாசி வளராத இடம் தான் வடக்கு...! அட! வடக்குல சூரியன் வராது அதனால பசய்யமும் இருக்காது.!

 'வடக்கிருந்து உயிர் விடுதல்'ன்ற சொல்லாடல் அருமையானது தான். இரும்பொறையும் பிசிராந்தையாரும் ஞாபகம் வந்தா சந்தோஷம் தான்.
 
இப்போ நம்ம திடீர்னு யோசிக்கும்போது இந்த திக்விஜயம் அப்படி என்ற ஒரு வார்த்தையும் நமக்கு யோசித்து பாக்கணும்.

அப்போ இது நாள் வரையும் இடுகுறிப்பெயரா யோசிச்சிட்டு வந்ததும் கிழக்கு-மேற்கு கொஞ்சம் பிரிச்சி பார்த்தோம்னா கீழ்த் திக்கு-மேல் திக்கு அப்படின்னு பார்த்தா கொஞ்சம் வித்தியாசமா இருக்கு இல்லையா..!

இது எல்லாமே என்னுடைய 'ஒருவேளை இப்படி இருக்குமோ?' அப்படி என்ற ஒரு யூகத்தின் அடிப்படையில் தான் கேட்கிறேன் இதனுடைய அடிநாதத்தை நான் இன்னும் தேடி பார்க்கல.
 
ஆனா கண்டிப்பா கீழ்த் திக்குனு யோசித்துப் பார்க்கும்போது தரை எப்பவுமே கடலைவிட மேல இருக்குது. கடல் கரையிலிருந்து பார்க்கும் போது கீழ இருக்குற திசையா தான் இருக்கும். அப்படின்னா கண்டிப்பா சூரியன் எல்லாருக்குமே கீழேதான் உதயமாகிறது குறைந்தது இந்த வங்காள விரிகுடாவின் கரைல இருக்க எல்லாருக்கும்.!

கொறஞ்சு இதெல்லாம் பாக்கும் போது 

கீழ் திக்கு - கிழக்கு

மேல் திக்கு - மேற்கு

வரா திக்கு - வடக்கு

னு யோசிக்க தோணுது. கிழக்குல இருக்க கோடில ஒரு பிஸுடோ சயின்ஸா கூட போகலாம் இல்ல மறைந்தும் ஆராயத உண்மையா இருக்கலாம். ஆதாரம் இல்லாத வரை வெறும் அனுமானம் தான். 

ஆனா இது என்றும் உண்மை தான் - 'கிழக்கு நோக்கி நிற்கின் இடக்கை வடக்கு' நான் கேட்ட தமிழ் அறிஞரின் சொல்லாடல்



 

Saturday, October 19, 2024

தேவையும் பணமும்

ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்த பிறகு ஒரு நாள் என் நண்பனோட போயிட்டு இருக்கும்போது 

என் நண்பன் "அந்த ஆள தெரியுமா" கேட்க 

"என்னடா ஆச்சு?! தெரியாது" நான் சொல்ல

"அவன நல்லா பார்த்துக்கோ அவன்தான் போன வாரம் அந்த மெக்கானிக் பையன தலைய அறுத்து கொண்ண 3 பேர்ல இவனும் ஒருத்தன் இன்னைக்கு பெயில்ல வந்துட்டான்" 

"என்னடா சொல்ற கொலை நடந்ததா" அப்படின்னு கேட்க 

ஆமாடா தொழில் போட்டி தான் கொலைக்கு கரணம். அந்த பையன் மெயின் ரோட்ல ரோட்டுல மெக்கானிக் ஷாப் வெச்சிருந்தான் இவனுங்ககளோ உள் மெக்கானிக் ஷாப் வெச்சிருந்தாங்க, அந்த பையனுக்கு நெறைய வண்டி போறது பாத்து காண்டு ஆயிபோயி அந்த பையன மிரட்டி இருக்காங்க. அந்த பக்கம் வர வண்டிய நான் பாக்கல நீங்களே பாத்துக்கோங்க சொல்லிருக்கான்.

ஆனா ஒரு வாரம் கழிச்சு அதே ஆளுங்க அந்த பையன் அந்த பனைமரத்துக்குப் பக்கத்துல வச்சி தலையை துண்டாக்கிட்டு போயிட்டானுங்க. பணம் பண்ற தொழிலே எமன் ஆகிடுச்சு. பொழப்பு தேடி வெளியூர்ல வந்து திறமையா பொழச்சவன கொன்னுட்டாங்கனு சொல்ல

அதே இடத்தில் ஆறாவது படிக்கும்போது தொடைல தெருப்பா தெரிஞ்ச தடித்த முடியால அந்த பையன் பருவம் வந்துட்டான் நல்லா காமிச்சு கொடுத்துச்சி கொஞ்சம் அரும்பு மீசையும் தான். அதே பனமரத்த தாண்டி நகரும் போது அந்த பையன் சொன்ன வார்த்தை காதுல மறுபடியும் கேட்டுது

"பணம் ஒரு விலைமாது யார் திறமையா வலிமையா இருக்கானோ அவன் பின்னாடி போயிடும்"

ஏண்டா இப்படி சொல்ற வேணாண்டா சொன்னோம். அவனோட கோவத்திலும் வெறுப்பிலும் வந்த வார்த்தை தான் அது எங்களுக்கு புரிஞ்சுது.

"அவங்க பின்னாடி தான் எப்போதும் அந்த பணம் போது" அப்டின்னு உரக்க சொன்னான்.

அப்பாவால் கைவிடப்பட்ட அந்த பையனுக்கு வேற என்ன பண்றதுன்னு தெரியல வெகுளியான தங்கச்சி என்ன பண்றது தெரியாதா அம்மா இப்படி மூணு பேரும் தன்னுடைய பாட்டி வீட்டில அழையா விருந்தாளியாக இருந்தாங்க.

 
இப்படி கசப்பான சம்பவங்கள்னால பொதுவா பணம் பத்தி பல பிம்பம் இருக்குது. இப்படி பல பிம்பத்துக்கு நடுவுல நமக்கு நல்லது சொல்லித்தர அதே உலகம் பணத்தோட முக்கியத்துவத்தை சொல்லித்தர மறந்துடுது

பெருமான்மையா  நம்ம கட்டமைப்பில் பணத்தை எப்பவும் 
வில்லத்தனமாக பார்க்கிறது,
பணம் உடையவர்களுக்கு கருணை இருக்காது,
பணம் இருக்கிற திமுருல எல்லாம் செய்யறான்,
நாலு பேரு வயித்துல அடிச்சு வாங்குனது,
 

ஆனா கொஞ்சம் யோசிச்சி பார்த்தோம்னா பணம்ன்றது என்ன ?
நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிற உழைப்பின் ஒரு உத்திரவாதம்

நமக்கு தேவைக்கு பணம் இருந்தா போதும் அப்படி என்ற அளவுக்கு தான் யோசிக்கிறோம் ஆனால் தேவைன்றது என்னனே யோசிக்கிறது இல்லை பெரும்பாலும் தேவை என்று சொல்றது என்னனா 

அடிப்படைத் தேவைகளை தான் - நல்ல நிலையான வருமானம் (வாழ்க்கை தரத்தை அப்படியே கொண்டு போக), நல்ல துணிமணி, ஒரு கல்யாணம் பண்ற அளவுக்கு தேவையான தொகையும்  நகையும் , இதுக்கு நடுவுல இந்த விழா அந்த விழானு எந்த விழாவுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுனு பணத்தை பத்தியான தேவை சுருங்கி இருக்கு

இந்த சமுதாயத்தில் எந்த ஊர்ல பொருளை கொண்டு போனாலும், ஒரு ஆயிரம் பேர் சம்பந்தப்பட்டு இருப்பாங்க, அது அந்த ஊர் VAOலிருந்து அந்த கம்பெனி உடைய செக்யூரிட்டி இப்படி பல ஆயிரம் பேர் இந்த பொருளோட சம்மந்தப்படுறோம். இந்த பொருளோட விலையும் பணத்தோட மதிப்பும் நம்ம சமூக மனப்பாண்மை போல கட்டுக்கடங்காமலும் சில நேரங்கள்ல அடங்கி ஒடுங்கி புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கு

உண்ண உணவு 
உடுக்க உடை 
இருக்க இடம் நம்முடைய தேவை சுருங்கி இருக்கிறதில்ல 
 
நம்ம குழந்தைகளுக்கான கல்வி-ன்ற இடத்திலேயே பல ஆயிரம் ரூபாய் கொடுத்து விடும் நிலை இருக்கு.
 
சரி அரசாங்க பள்ளியா இரு‌ந்தாலும் அரசாங்கத்திற்கு தேவையான பொருட்களை யார் உற்பத்தி பண்ற அந்த உற்பத்தி பண்ற பொருள்களுக்கான இடம் எங்கிருந்து வருது

நாம சாப்பிடுற சாப்பாட விளைவிக்கிற இடமும் உபகரணமும் நமக்கு தேவை இல்லையா 

நம்மளுடைய கழிவுகளை சுத்திகரிக்கற இடமும் உபகரணங்களும் நமக்கு தேவை இல்லையா அந்த கல்வி கற்கிறோம் என்ற அந்த இடத்துக்கு அனைத்தையும் நமது தானே 

அதேசமயம் நம்ம குழந்தைகள் விளையாட வேண்டிய இடத்துக்கான தேவை நமது தானே

இந்த மருத்துவமனையில் இருக்க ஒவ்வொரு ஒவ்வொரு உபகரணங்கள் அதை தயாரிக்கிற இடம் அந்த மருத்துவமனைக்கான இடம் அப்படின்னு பார்த்தோம்னா 
இத்தனை விஷயத்துக்கும் நம்ம பணம் பண்ணனும் அதுமட்டுமா
குறைஞ்சது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போகறதுக்கு இன்னைக்கு எது வேணும்னாலும் ஒரு வண்டி தேவை இந்த வண்டி இது நம்ம யோசிக்கவே 

நம்முடைய தேவைகள நம்ம உணரும்போது தான் பணம் பண்றதே  எவ்வளவு முக்கியம்ன்னு யோசிக்க ஆரம்பிக்கறோம். அந்த பணத்தை எப்படி செய்யறது ?

ஒரு நல்ல விஷயம் என்னன்னா இங்க நம்ம ஏற்படுத்துகிற ஒரு பொருள் கோடிக்கணக்கான பேர் செய்ய முடியும் நீங்க அந்த கோடிக்கணக்கான விற்பனையில பத்து ரூபாயை லாபம் எடுத்து பங்கிட்டாலும் நம்ம குழுவோடு சம்பாதிக்க முடியும.

ஆனா யாருக்காக உழைக்கிறோம் எதுக்காக உழைக்கிறோம் என்ற கேள்வி யோசிக்க தான் வேணும்.

Monday, October 7, 2024

காமம் காதல் கல்யாணம்

எல்லா மதத்திலும் ஆணுக்கு ஒரு மிகப் பெரிய பதவி இருக்கு... என்னன்னா துறவி தாங்க  அதுலயும் கல்யாணம் ஆகாத துறவிதான் உயர்ந்தவரா காட்டப்படுவார்கள் ரிஷியா இருக்கட்டும் இல்ல சூஃபி-யா இருக்கட்டும் இல்ல நம்ம ஃபாதர்ரா இருக்கட்டும் ஏன் பௌத்தம் சமணம் அப்படின்னு எடுத்துகிட்டா கூட பல இடங்களிலும் கல்யாணம் ஆகாத ஆண்களை தான் நம்ம அந்த மதத்துடைய தலை சிறந்த தலைவராக பார்க்கிறோம்.

இத பத்தி யோசிக்கும்போது ஓஷோ-வோட ஒரு தத்துவம் தான் தோணுது 
எந்த ஒரு மரத்து மேல ஒரு துணியை மூடி வைத்தால் மனுஷனுடைய மூளை என்ன செய்யுமா அந்த துணியை கழட்டி அதுக்குள்ள என்ன இருக்குனு பார்க்க தோனும் மணுஷனுக்கு

ஆனா நம்ம ஊர்ல இல்ல இந்த உலகத்துல பல இடத்துல - அந்தத் துணிக்கு மஞ்சள் குங்குமம் என்ற முலாம் பூசி நம்ம கண்ணத்தில போட்டுக்குனு கையெடுத்துக் கும்பிட்டு அதை வணங்கி விட்டு சாஷ்டாங்கமாக தொப்புள்ல மண்ணு படுற அளவுக்கு கும்பிடுறோம். இப்படி பக்தி உணர்வ கொண்டு அந்தக் ஆர்வத்த கம்மி பண்றோம். 

இந்த காமம் என்ற உணர்வ கட்டுப்படுத்த நம்மளா வகுத்துக்கொண்ட ஒரு விஷயம் இந்த பிரம்மச்சாரியம். சமூக ஒழுங்க கடைபிடிக்க உதவறதும் இதுதான். இது ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு பெற்றோர்களும் சிறுவயதிலிருந்தே ஆண்களுக்கு போதிக்கப்பட்ற ஒரு விஷயம். ஒரு பெண்ணுக்கு பிரம்மச்சரியத்தை சொல்லித்தராங்களோ இல்லையோ (பதிலா கற்பு இருக்கும்) ஒரு ஆணுக்கு கண்டிப்பா அந்த மதம் ப்ரம்மச்சாரியாத்த சொல்லி தருது. பெண்கள்களுக்கு என்னவோ அவர்களுடைய வாழ்க்கை ஒரு குழந்தை பிறந்தால் தான் நிறைவடைவதாக ஒவ்வொரு மதமும் சொல்லுது அது  என்ன பயம்னா பெண்கள் எல்லாம் இங்க துறவி ஆயிட்டா ஜனத்தொகை கம்மி ஆயிடும். அதனாலேய பெண்களுக்கு துறவி என்ற ஒரு பதவியை ஒவ்வொரு மாதமும் கொடுத்து வைக்கல. (கிறுத்துவ கன்னியா பெண்களும், சமணம் பூண்ட மணிமேகளையும், சக்தி மார்க்கமும் விதிவிலக்குத்தான்)

இரண்டாவது முலாம் பூச்சா மறுபடியும் படிப்பு, பெரியவங் சொல்றத எதிர் கேள்வி கேட்காம கேட்டுகணும் என்ற ஒரு முலாம் பூச்சு மூலமா       ஆண்களுக்கு ஆர்வமும் கேள்வி கேட்குற மனபாண்மையும் மட்டுப்படுத்தப்படும். இதையும் தாண்டி குசும்பா கேட்கிற பசங்க இருக்கத்தான் செய்வாங்க. அப்படிதான் ஒரு நாள் என் நண்பன் இனப்பெருக்க அறிவவியல் பாடம் எடுக்கும் போது, 'அது எப்படி சார் இந்த விந்து போய் அந்த கருமுட்டையை சேரும்'ன்னு கேட்க அதெல்லாம் அப்படிதான் சேரும் அப்படின்னு சொல்லி அவசரமா பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக வகுப்பு எடுத்தாங்க அந்த இனப்பெருக்க உயிரியல் வகுப்ப.

அப்ப அந்த கேள்விக்கான அர்த்தம் புரியல ஆனா இன்னைக்கு திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் அந்த கேள்விக்கான விடைகள் நம்மள சுத்தி இருந்துகிட்டே இருக்குனு யோசிக்கறேன். கோயில் உடைய சிற்பங்களைப் பார்க்கும் போது இல்லைன்னா இந்த சின்ன சின்ன உயிரினங்கள் உடைய இனச்சேர்க்கைய பார்க்கும்போது நமக்கு கண்டிப்பா அதற்கான விடை கிடைக்குது. இந்த உயிர்கள் நம்மள சுத்தி இருக்கிறது அவ்வளவு ஒரு நல்ல விஷயம் தான். பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்காத முடியாத விஷயங்களையும் இந்த சின்ன சின்ன உயிரினங்கள் எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்குது. பட்டாம்பூச்சியாய் இருந்தா கூட சரிதான் அதுங்க ஒன்னா சேர்ந்து பறக்கும்போது ஏன் அப்படி பறக்குதுன்ற கேள்வி கேக்க தோணும். அறிவியல் இந்த முலாம் பூச்ச சத்தமில்லாம உடைக்குது.

எப்படி நம்ம இந்தப் படிப்பு முலாம் பூச்சில் இருந்து வெளியே வரும்போது 14/16 தொட்டிடுறோம் அப்பவே நம்ம பருவ தனிமையும் சுட்டெரிக்க ஆரம்பிக்குது. பத்தாம் வகுப்பு முடித்த பிறகு ஏதோ கொம்பு முளைக்குதோ இல்லை, ஆணையும் பெண்ணையும் யோ இந்த பருவத் தனிமை  வாட்டதான் செய்யுது. இதற்கான விடையை நம்ம என்ன தான் கடவுள் கையில் தேடினாலும் சில நேரம் சக்தி கொடு என்று பாடினாலும் அந்த பெண்/ஆண் சக்தியை தான் நம்ம நாடி நிற்கிறோம் காதல் என்ற உணர்வ.! அவர்களுடைய கணிவு கொடுக்குற பேச்சா இருக்கட்டும் இல்ல ஒரு அங்கீகரிக்கிற பார்வையா இருக்கட்டும், அது ஒரு பசுமரத்து ஆணி போல நம்ம நெஞ்சில பதிய தான் செய்யுது.

சரி இந்த படிப்புகள் மூலம் பூச்ச தாண்டி நம்ம கொஞ்சம் மேல வந்து
அப்படியே காதல யோசிச்சி பார்க்கும்போது இந்த பொருளாதார தடை தான் வந்து நிக்கும்.  ஒரு பொண்ணை யோசிச்சு பார்க்கும்போதே
குறைஞ்சது 
அவளுக்குத் தேவையான விஷயத்த எல்லாம் அவனால வாங்க முடியுமானு? கேட்ட அந்த லிஸ்டு தான் வந்து நிக்கும்
அவளுக்கு நாப்கின் வாங்கி தரமுடியுமா ? 
(இயற்க்கைனாலும்  - முகம் சுளிக்கற கேள்வி தான் பொதுப்புத்தியோட ஆயுதம்)
அவளுக்கு நல்ல துணி வாங்கி தருவானா?
அவளுக்கு நல்ல சோறு நல்ல வீடு கொடுப்பானா?
அவளுக்கு பிரசவம்னா நல்ல ஹாஸ்பத்திரில சேப்பான ? இல்ல தர்மாஸ்பத்திரிலயா ?
இப்படி அடிப்படை தேவை அந்தஸ்து பத்தி ஆயிரம் பொதுக் கேள்வி வரும்.


இதெல்லாம் நம்ம தாண்டி வர காமமும் காதலும் பிறந்து இறந்து பல ஜென்மம் எடுத்து கடைசியில் கல்யாணம் என்ற பொது இடத்துக்கு வரும். சில நேரங்களில் காமமும் காதலும் கல்யாணமும் ஒரு சில பேருக்கு கைகூடிய வந்தாலும் பல பேருக்கு கை கூடுவதில்லை.

இந்த பருவ தனிமையை தணிக்க கடைசியா நம்ம கிட்ட இருக்க பிரம்மாஸ்திரம் என்னன்னா இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதாவது காதலையும் காமத்தையும் அங்கீகரித்த கல்யாணம் என்ற பேக்கேஜ் தான் இதுல தான் எல்லாமே ஒன்னா இருக்கு. வெறும் காமம் காதல் மட்டும் இல்ல ஒருத்தரோட நட்போடு வாழ்நாள் முழுதும் பயணிக்கிற ஒரு விஷயமும். அந்த இருவரும் ஒரு கூட்டத்தோட வாழுற சமூக வாழ்வியலும் தான்.

அது மட்டுமா ஒரு பிள்ளையை பெற்று எடுக்கிறது அவங்களை வளர்த்தெடுக்கிறது, அந்த பிள்ளைகளால் வரும் சந்தோஷம்னு பல விஷயமும் இந்த பேக்கேஜ்லதான்.

இந்த கல்யாணம் என்ற பேக்கேஜில் ஏதாவது ஒண்ணு நினைச்சு மட்டுமே இங்க உள்ள வந்து இருந்தா அவங்களுக்கு கண்டிப்பா வலி தான் மிஞ்சும் . இதுல எல்லாத்தையுமே ஆல்ரவுண்டர் இருக்கலாம் இல்ல ஸ்பெஷலிஸ்ட் இருக்கலாம் ஆனா கண்டிப்பா குறைந்தபட்ச எல்லாத்தையும் தெரிஞ்சு இருக்கணும் பழகவும் செய்யணும் அது அவங்க ரெண்டு பேரோட விருப்பத்தோட.

Wednesday, October 2, 2024

Enroute OMR..!

 



                Whoever is an engineer in Tamilnadu must be might aware of the GST road and OMR road, the former road leads us to Anna University at the start of engineering counseling. The later road is well known for major IT Companies, At least this road might be discussed as their second option in their job search irrespective of their core field in engineering.

The long-waiting Kamatchi Hospital signal is a landmark of this road. The 'chor rasta' (four roads)connects the Pallavaram, Medavakkam, and Velacherry. The 200 ft road that links the GST and OMR is well known to people in Tambaram commissionerate. Many suburban people use this road to reach Thiruvanmuyiur or OMR.


For any youngster who comes along the GST and enters the 100 ft to reach OMR, the breeze they get from Pallavaram 'Periya Eri' is bliss. At any speed bike travels, the lake's breeze appears to be an oasis in summer weather, making them reduce their speed to enjoy it slightly.
After crossing a few signals to the next Lake... you may think that your blissful moments may continue at Vel's university adjacent to Nemilichery Lake, neither the so-called university nor Nemilichery Lake favour your thoughts. The 200 ft road will be almost at 1st-floor height compared to the road to Vel's University/Lake Road.



For another 2 km, you could witness a deserted road of trees. The furious sun might bake you on the road like a thar oven. Certainly, the Keelkattalai is an order of our nature to cool our suffocated clothes'(from our fuming sweat). Unlike Nemilchery Lake, this lake is obvious to everyone and an eye treat amidst the brand-new concrete jungle. Not to mention the free space levies a cost on us, the 6 lane becomes 4 lane here! Oh oh oh... government has not made it as 4 lanes in the interest of the lake & people's recreation. Our heavy trucks use each lane on either side of the road for parking.

 
Neither the sun nor the dust will leave you. You need to travel another 2 km, to find another oasis in the arid city roads... Narayanapuram Lake one another eye feast awaiting you. You can spot rare birds also here. The Nageshwari Amman on the 'Eri Karai' road may hint to you that this region could be once ruled by snakes.

The moment you cross the Lake you start to see buildings fitted with glasses of green tint. Building might be shining but traffic and noise along with petroleum fumes make your face dull. If you are lucky you may escape the 1km traffic and Velachery - 200ft road junction within a minute. Otherwise, you watch the vehicles moving in all 7 directions for 8 to 15 minutes. Don't worry this place will help you to think a lot, about how the National Institute of Ocean Technology formed a marshland... they might be interested in the ocean but not about the people who are saved by marshland.

You may get a funny title like "Mountain on Marshland"  after seeing the Perungudi dump yard. You may be carried away by similar ideas but when the signal turns red to green your mind comes to the acceleration throttle of your bike engine instead of thoughts. Erk most of us want to cross the marshland in a single breath, not because the road is free, but due to the bad smell of the dumpyard. 


   


When you cross the stretch straight opposite to the dumpyard you will witness the Chennai One IT Park at the cost of signal,