Friday, January 28, 2022

ஊர் விட்டு ஊர் வந்தவன்


அந்த ஒவ்வொரு ஊர் ஏரியால ஏதோ ஒரு வீட்ல 'தட' 'தட'னு தையல் மெஷின் ஓடற சத்தம் கேட்டுட்டு இருந்த காலம் அது, தென்னங்கீத்து டிப்போ இருந்த ரோடு, ஒன்னு இல்ல ரெண்டு டீ கடை, பூச்சி மருந்து கடை, லாட்டரி சீட்டு பெஞ்சு, ஜூஸ் கடை, காய் கறி கடை, பழைய பாணி பேக்கரி, அங்கயும் இங்கயும் ஒன்னு ரெண்டு ஹோமியோபதி அல்லோபதி டாக்டர் வீடு, சினிமா தியேட்டர் னு பஜார் இருக்கும். பெரும்பாலான கடையோட கதவு பல மடிப்பு பலகை தான்.

        கிண்டி தொழிற்பேட்டை கூட (சென்னை) மெட்ராஸ்க்கு வெளியே தான்னு  சொன்ன காலகட்டம். எக்ஸ்போர்ட் கம்பெனில வேலை சேர்ந்து சென்னை புற நகர் மக்கள் அவங்களோட வருமானத்தை உயர்த்திகிட்டு இருந்தாக. ஊருக்குள்ளேயே இல்லனா பக்கத்து ஊருல களை எடுக்கறது, நாத்து நடறது, அறுப்பு அறுக்கறது, நெல்லு குத்தறது, ஓலை முடையறது, புளி ஆயறது, சித்தாள் னு வேல செஞ்சி வருமானம் பாத்த பல பெண்களுக்கு இந்த எக்ஸ்போர்ட் வேல புதிய உலகத்த தந்துச்சு.

        நிலையற்ற ஆண்களை கொண்ட குடும்பத்துக்கு இந்த வேல வாழ்வாதாரமா இருந்துச்சு. பஸ்ஸுக்காக ரோடுக்கு போனா கிட்ட திட்ட ஒரு பஸ் வர ஒரு மணி நேரம் ஆகும் அதுக்காகவே சில எக்ஸ்போர்ட் கம்பெனி பஸ் அணுப்பிட்டு இருந்தாங்க.  எக்ஸ்போர்டுக்கு வேலைக்கு போகும்போது இவங்களோட ஆர்பரிப்பும் ஆரவாரமும் சித்திரை வெயில்ல சடசடனு மழை பெய்யறது போல இருக்கும், கம்பெனிலயிருந்து வரும்போது  மழை ஒஞ்சி முடிஞ்ச பிறகு மழைல நடந்த விஷயத்த ரசிச்ச மகிழ்சியான முகத்தோடயும், உஷ்ண மறுதல தங்கமா அலுப்பு தட்டுன முகத்தோட சிலரும் , மழைல நடந்த நிகழ்வ 'கிசு கிசு'ப்போட சிலரும்னு பல பெண்கள் வீடு திரும்பினாங்க.

    "அதாம்பா அந்த எக்ஸ்போர்ட்டுக்கு போதுல  அந்த பொண்ணுடா அப்பா தான் அவுரு"னு  சில பெண்கள் அவங்க வீட்டோடு அடையாளமா மாறுனாங்க. பொதுவா கிராமத்துல (எந்த சமூக குழுலயும்) ஒரு மனுஷன் எப்படி வித்தியாச படுறானோ அதுவே அவனோட அடையாளமா ஆயிடுது. செல்வாக்கு மிகுந்த ஆட்கள் அவங்களோட சாதி பெயர் அடையாளமா இருக்கும், அதே சாதியிலே இருக்கிற அடுத்த ஆளுக்கு கடை வச்சா கடைக்காருனு, சாமான் வித்தா சன்மான்கார்னு னு அவர் செஞ்ச தொழில் வச்சு அடையாளம் வச்சு கூப்பிடுவாங்க. இதுவே வேற ஊர்ல இருந்து அந்த ஊர்ல வந்தவங்கனா 'கோயம்பத்தூர்க்காரு மெட்ராஸ் ஆளுன்னு' அவங்க அடையாளம் ஆயிடும்.  

        இந்த சாதி மாதிரி தான் ஊர் விட்டு ஊர் வந்தவங்க நிலையும் பொறப்ப மாத்த முடியுமா? இல்ல முன்னோர் இருந்த ஊர தான் மாத்த முடியுமா? இல்லையே!!. என்ன தான் அமெரிக்காலேயே பொறந்து அமெரிக்காலேயே வளர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆனாலும் எங்க தமிழ் நாட்டை சேர்ந்த 'பெண்'னு நம்ம உழைச்சு வாங்காத வெற்றிய பெருமை கொண்டாடுறோம். ஒரு பெண் முன்ன வந்தா இன்னொரு சந்தோஷ படறதும் ஒரு நாட்டை சேர்ந்த ஒருத்தர் பல நாட்டு போட்டியாளர்களோட போட்டி போட்டு வெற்றி அடைஞ்சா அந்த நாட்டோட கோடில ஒருத்தர் சந்தோஷ படறதும் 'தான் ஆடா விட்டாலும் தான் தசை ஆடும்'ன்றா போல நடக்குது. ஆனா மொழி மதம் நாடு சாதி இனம் னு பாக்க தெரியாத குழந்தைகிட்ட நாம சிரிச்சா கண்ணம் இது, உதடு இது னு தெரியாத அந்த குழந்தை  திருப்பி சிரிக்கும். நம்ம அழுதாலும் அந்த குழந்த பரிதாபமா பாக்கும் சில குழந்த அழவும் அழுதிடும். இது தான் இயற்க்கை அழகே!. ஏன் எந்த உயிரோடயும் இப்படி ஒரு கண்ணுக்கு தெரியாத உணர்ச்சி பிணைப்பு இருக்கு. அதே மாதிரி ஊர் பெருமை பேசி பெருமை அடையரதும் இல்ல சந்தோஷ படறதும்.

        என்ன தான் இயற்கையா ஊர் பெருமை பேசறது இருந்தாலும் இதே நமுக்கு எதிரா இருக்கு. 1985லயே பல பேர் ஊர் விட்டு ஊர் மாறி குடி போனாங்க, ஆனா 1995ல தான் சென்னை புற நகர் மக்களுக்கு-பெண்களுக்கும்  ஊர் விட்டு ஊர் போய்  வேலை பாக்குறது ஒரு அனுபவமா இருந்துச்சி. அது வரைக்கும் (ஏன் இப்ப கூட) இப்படி குடி பெயர்ந்து வந்தா அவங்களுக்கு முதல் கிடைக்கற அடையாளம் 'ஊர் விட்டு ஊர் வந்தவன்'. ஒரு மூணு தலைமுறையா அதே ஊர்ல இருக்கிற மக்கள் கிட்ட இந்த பொருமல் இருக்கு பல சொல்லாடல் இது வெளிப்படும்  

 1. 'ஊர் விட்டு ஊர் வந்தவங்க எல்லாம் நல்லா இருகாங்க நாங்கதான்...'
 2. 'ஊர் விட்டு ஊர் வந்த உனக்கு இந்த ஊர் பத்தி என்ன தெரியும்...'
 3. 'ஊர் விட்டு ஊர் வந்தவன் எல்லாம் ஆடுறான் வச்சிகரன் அவனுக்கு...'

அடையாள படுத்தி பேசறது இதுக்கு மட்டுமா 

    'துலுக்கனுக்கு என்ன அவ்ளோ துணிச்சல்'
    'பார்ப்பான் பையன் மீன் புடிக்கற போல' னு 

பல சொல்லாடல் வச்சு அடையாள படுத்தி பேசப்படுது. இப்படி பேசறது - நான் வேற நீ வேற னு பிரிச்சு வைக்குது. 

ஏன் ஒரே மாவட்டத்துல ஒரே சாதியில குடி பெயர்ந்து வந்த குடும்பத்துக்கு கூட கொடுக்கற பெயர் ஊர் விட்டு ஊர் வந்தவங்க தான். அப்போ மும்பைல தமிழர்கள... ஏன் மத்த மாநிலத்து ஆள மராத்தி பேசுற அதே மாநிலத்து மக்கள் வேற்றுமை உணர்வோட பாக்குறதோ அமெரிக்கால மத்த நாட்டுலேயிருந்து குடி பெயர்ந்தவர்கள வேற்றுமை படுத்துறதோ சர்வ சாதாரணமான விஷயம் தான். (அமெரிக்க பூர்வ குடி செவ்விந்தியர்கள தான் இன்னைக்கு இருக்கிற இங்கிலாந்து பேர பிள்ளைகள் இல்ல!!!) ஆனா அது வெறுப்பா மாறி காழ்ப்புணர்ச்சியால அடிதடி வரைக்கும் போகுது.

ஆரியர்கள் யார் யார்னு பிரிச்சு பாத்து வந்தேறினு சாயம் பூசுறோம் அதே சமயம் அமெரிக்கால தமிழர்கள் மிக பெரிய பெரிய இடத்துக்கு போறாங்கனு சந்தோச படுறோம். அதே சமயம் "தமிழகத்த தமிழன் தான் ஆளனும்"னு சொல்ற படத்த பெருமையா பேசிகிட்டே... மும்பைல தமிழன் எப்படி கெத்தா தான் உரிமைய பாதுகாக்குறான் சொல்ற படத்த மலேசியால தமிழன் முன்ன வர்றதா பிடிக்காத மலேசியாகாரன் எப்படி சொல்ற படத்தையும் பெருமையா பேசுறோம்.  இந்த தமிழர்கள் அந்த அமெரிக்கால மும்பைல மலேசியால வந்தேறிகள் இல்லையா?! 

'எங்கிருந்து வந்தவன் எல்லாம் நல்லா இருக்கான்'ன்ற ஏக்கம் 
'எங்கிருந்தோ வந்தவன் அவன் சொந்த பந்தத்தை கூட வச்சிப்பான் நம்மளையா?'ன்ற எண்ணம் இப்படி பல விஷயத்தால நம்மலோட நம்பிக்கை வட்டாரத்துல இல்லாத ஆட்கள தள்ளி வைக்கிறோம். ஒரு பிரிவ மீண்டு வர்றதே வல்லமை தான்! இன்னொரு பக்கம் ஏதோ ஓன்னு இல்லன்ற இல்லாமையும் தான்..! சாதாரணமா எந்த மாற்றமும் இல்லாம அதே இடத்தில வாழறவங்களுக்கு குடி பெயர்ந்து வந்தவங்க மேல சந்தேகமும்/பயமோ/எரிச்சலோ அப்ப இப்போனு வந்து போகுது.
 
ஊர் விட்டு ஊர் வந்தவங்க அந்த ஊர் விழாக்கள், அடிப்படை கடவுள், சரித்திர சுவடுகள், ஆறாத பகை னு எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு அந்த ஊர் நல்லது கெட்டதுல பங்கு எடுக்கும் போதுதான் கொஞ்சம் கொஞ்சமா ஏத்துக்க முயற்ச்சி பண்ணுவாங்க.!!

 எந்த ஊருக்கு போனாலும் எந்த நாட்டுக்கு போனாலும் எந்த கடல்ல மிதந்தாலும் வானத்த அண்ணாந்து பாத்தா ஒரே கூரைல தான் இருக்கோம்னு தோணும்!!!
 

Friday, October 29, 2021

சகுனியும் பாராஒலிம்பிக்ஸ்சும்


ரொம்ப நாள் கழிச்சு அந்த மிஸ்ஸ/டீச்சரா பாக்க போறோம்னு நானும் என் நண்பனும் பைக் எடுக்கிட்டு கைல பத்திரிக்கையும் வச்சிக்கிட்டு கிளம்புனோம். ஒரு வழியா அவங்க வீட கண்டு பிடிச்சு, கேட் கதவ தட்டிட்டு, அவங்க முகம் தெரியுமான்னு காத்திருந்தோம். பக்கத்து வீடுகள நோட்டம் விட்டு முடிக்றதுக்குள்ள கதவு  திறக்க 'வாங்க வாங்க' ன்ற பரிட்சயமான குரலும் கேட்டது. நாங்களும் உள்ள போய் அவங்க கை காட்டின சோபால உட்கார்ந்தோம். டீ  குடிச்சிகிட்டே நலம் விசாரிச்சோம், அப்டியே எங்க வீட்டு நிகழ்ச்சிக்கு அவங்க கண்டிப்பா வரனமுன்னு பத்திரிக்கைய குடுக்க அவங்களும் வாங்கினாங்க. 

அப்டியே கடந்த கால பள்ளி நினைவ அசைபோட்டு மற்றவங்கள பத்தி விசாரிக்க ஆரம்பிக்க ஒரு மாற்று திறன் கொண்டவங்கள பத்தி பேசினோம். தீடிர்னு 'மாற்று திறனாளிலாம் கொஞ்சம் கர்வம் கொண்டவங்க, மத்தவங்க இரக்க படுறத அவங்க ஏத்துக்க மாட்டாங்க இல்லையா' சொல்ல என் நம்பனும் 'ஆமாம் அப்டித்தான் அவங்க' சொன்னான். 'ஆனா அப்படியில்லையே...' னு நான் சொல்றதுக்கு முன்னாடி 'இல்ல இல்ல அப்டித்தான் கொஞ்சம் அவங்களுக்கு கர்வம் அதிகம்' சொன்னாங்க. நான் என்ன திருப்பி சொல்றதுன்னு தெரியாம யோசிக்க.. அந்த பேச்ச விட்டு வேற விஷயத்துக்கு போயிட்டோம்.

என்னடா ராமாயணம் மகாபாரதம் பத்தி சொல்லிக்கொடுத்த அந்த மிஸ் இப்படி சொல்லிடாங்களேனு கொஞ்சம் ஏமாற்றத்தோடு கிளம்புனேன்.  

    அப்புறமா அந்த சம்பவத்தை அடிக்கடி யோசிக்க ஆரம்பிச்சேன். 'பெங்களூர் டேஸ்' படம் பாக்கும்போது கூட இந்த சம்பவம் தான் பின்னாடி ஓடும். அப்டியே 'மொழி' படமும் வந்துட்டு போகும்.


மகாபாரதம் சீரியல் பாக்கும்போது தான், அந்த குருஷேத்திர போருக்கு காரணமான சகுனி திட்டமிட்டு தான் மாற்று திறனாளியா (சகுனி தந்தையால்) ஆக்கப்பட்டார்னு தெரியுது. ஆனா பொதுவா நாம பாக்குறது என்னவோ மாற்று திறனாளியான சகுனி 'கெட்ட எண்ணம் கொண்டவன்', 'நயவஞ்சகன்', 'குடி கெடுப்பவன்'. 

    என்னடா மஹாபாரத கதையில (இதிகாசத்துல) இப்படின்னா ராமாயணத்துல கூட திருப்பு முனையா அமையருது கூனி சொன்ன யோசனை தான். ராமன் மேல பாசம இருக்க கைகேயி கூட  கூனியின் பேச்சால் தான் வனவாசம் அனுப்பறதா நம்புறோம்.

    நம்ம மனசுல இராமன்-இராவணன், பாண்டவர்-கௌரவர்கள் போல நல்ல நிக்குற ஆட்கள் சகுனி-கூனி. இன்னமும், தாய் மாமா எதாவது சொல்லி அது பங்காளி (ஒரு தாய் பிள்ளையானலும்) சண்டையாச்சுனா உடனே அந்த தாய் மாமானுக்கு கொடுக்கற பேரு 'சகுனி'தான். அதுவே ஒரு பெண் பேசி அந்த வீடு பிரியற நிலைமைக்கு வந்தா  'இந்த வீட்டுக்குனே கூனி இருக்காளே'னு வசை பாடுறது இன்னமும் இருக்கு. சகுனி-கூனி யோட மனுசுல நிக்கிறது இன்னொன்னு என்னனா ரெண்டு பேருமே உருவத்துல மாறுபட்டவங்க..! 

    உருவத்துல மாறுபட்டவங்கள பாக்கும்போது நமுக்கு முதல்ல தோணுறது இவங்க எப்படி வாழுறாங்க எவ்ளோ கஷ்டம். 'ஐயோ இவங்க எப்படி இருக்காங்களோ' பரிதாபம் தான். ஏன்னா நம்மள விட திறமை குறைவா இருந்தா அவங்க மேல கருணையும்(இல்ல எரிச்சல்) திறமை அதிகமா இருக்கவங்க மேல மரியாதையும் (சில நேரங்களில் பயமும்) ஏற்படுறது இயல்பானது. அத தாண்டி இவங்க, மாற்று திறனாளிகள் (திறமை அதிகமோ/குறைவோ)! எப்படி இருக்காங்க இல்ல தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்ன்ற ஓர் ஆர்வம் எப்பவும் இருக்கும். பொதுவா மாற்று திறனாளிகள் பத்தி ஆச்சர்யமோ/வியப்போ இருக்கு. 

    கொஞ்சம் யோசிச்சு பாத்தா, நமக்கே நம்ம மேல வேற யாராவது கருணை காட்டினா  பல நேரத்துல பிடிக்கிறது இல்ல. நம்ம தன்னிச்சையா இயங்கணும்னு ஆச படுறோம்! நானும் உன்ன போல சராசரி ஆளுனு நினைக்கிறோம் அப்டியே செயல் படுறோம். ஆனா பல விஷயத்துல நம்மால 'இவ்வளோ தான்' முடியும் நினைக்கிறோம் மத்தவங்க உதவியும் வாங்குறோம்.  சரி ஒரு கொழந்தையா எடுத்துப்போம் ஒரு சூழல் வரைக்கும் அப்பா அம்மா கை பிடிச்சி நடப்பாங்க அப்புறம் வலிய பிடிச்சாலும் கைய உதறிட்டு நடப்பாங்க, ஒரு கட்டத்துல வெளிய போக கூட தன் நண்பனோடு /நானே போறேன் - அப்பா அம்மா வேண்டாம்னு சொல்வாங்க, அவங்க வாழ்க்கை முடிவை அவங்களே எடுப்பாங்க. இத மீறி அப்பா அம்மா ஏதாவது மாற நடந்த/ அதீத அக்கறை காட்டினாவோ "என்ன இன்னும் சின்ன குழந்தையா நடத்தாத"னு சண்டையே நடக்கும். சில நேரத்துல குளிர்கால போரே நடக்கும்.

    ஒரு சின்ன கொழந்தையே கை உதறிட்டு தானா நடக்கணும் நினைக்கும் பொது வளர்ந்த/வளரும் மாற்று திறனாளிகள் வேற யார் தயவு/கருணைல வாழாமா தானே வாழணும்னு நினைக்கிறது சரிதானே. சில நேரத்துல கருணையோடு மாற்று திறனாளிக்கு உதவும் போது நாங்களா எங்க பிரிச்சனையா பத்துக்குறோம்னு அந்த உதவிய மறுக்கும் போது உதவ நினைக்கிறவங்க மனசுல உணர்ச்சி சலனம் ஏற்படுது. இந்த உணர்ச்சி சலனம் பல நேரத்துல வசை மாரியா பொழியுது கர்வம் பிடிச்சவ/திமிரு பிடிச்சவ. இதுல இதிகாசத்த சேத்துப்போம் (சகுனி/கூனி னு). 


மாற்று திறன் உடையவர்களை சராசரி ஆக்க உதவுற பரஒலிம்பிக்ஸ் ஓர் அற்புத நிகழ்வு. மாற்று திறனாளிகள அனைத்து உணர்ச்சியும் உள்ள சராசரி சக மனுஷர்களா அணுகுவோம். எல்லாருமே இங்க ஒரு விதமான தடைய மீறி முன்னேறுறோம்.

Tuesday, October 12, 2021

மதமும் நம் நம்பிக்கையும்

(Source: cute baby pictures blogspot)

நம்ம வீட்ல பொறந்த கொழந்த (குழந்தை) கை விரல் நீட்டி மடக்க தெரியாத போதே நாம சாமி கும்பிட (தொழுகை பண்ண, பிரார்த்தனை பண்ண ) வச்சிடறோம்.

    அதே 3 வயசு குழந்தை 'புக்க' மெரிச்சிட்டா முதல்ல நாம சொல்றது "சாமி டா (செல்லம்), புக்க மெரிக்க கூடாது சரியா...?" னு சொல்லி, அந்த புக்கோட  மதிப்ப உணர்த்தறோம். அந்த புக்கு, ஒருத்தரோட/பலரோட  உழைப்பில உருவானது அந்த உழைப்ப உணர்வ மதிக்கனும் னு சொன்னா  அந்த குழந்தைக்கும் புரியாது... அதனால அந்த புக்க நம்மலோட முழு பய பக்தி உணர்ச்சிய வெளிப்படுத்தி 'புக்க சாமினு' சொல்லி வைக்கறோம். 


    அப்டியே "உன்ன எப்படி அப்பா அம்மா பாத்துக்குறாங்களோ அப்படி தான், சாமி எல்லாரையும் காப்பாத்துவாங்க, ஆனா தப்பு பண்ணா தண்டனை கொடுப்பாங்க... சரியா?.  நீ தப்பு பண்ணாம இருக்கணும்" னு சொல்லி கடுவுள் மேல நம்பிக்கையும் பயத்தையும் சேத்தே உண்டாக்குறோம்.


இப்படி எல்லா மதத்துலையும் கடவுள் மேல நம்பிக்கை, பயம், எதிர்பார்ப்புனு பல உணர்வுகள தொடர்பு படுத்துறோம். அதே சமயம் மதம் தான் எந்த எந்த பழக்க வழக்கங்கள் சரி தப்புனு சொல்லி தருது.

  • 27 நட்சித்திரம் 12 ராசி பாத்து கல்யாணம் பண்ணனும்
  • வெள்ளி கிழமை வீட்ல வெளக்கேத்தனும் (பல்பு இருந்தாலும்..!)
  • செவ்வாய் வெள்ளி பெண்கள் தலை குளிக்கணும்
  • அமாவாசையில கறி மீன் முட்டை சாப்பிட கூடாது
  • புரட்டாசி மாசம் கறி மீன் முட்டை சாப்பிட கூடாது
  • ஆடி மாசம் கூழ் ஊத்தணும்
  • மார்கழி மாசம் அதி காலைல பெருமாள் வழி படனும்
  • கார்த்திகை மாசம் ஐயப்பன வழிபட்டா நல்லது
  • ஐப்பசில சிவனுக்கு  அன்னாபிஷேகம் பண்ணனும்
  • புரட்டாசி பெருமாள் கும்பிடனும் 
  • ஆவணி அவிட்டம் பூணூல் மாத்தணும் 
  • ஆடியில ஆத்தாவ கும்பிடனும் 
  • ஆடி கிருத்திகை முருகன் வழிபாடு  
  • ஆடி அமாவாசை திதி கொடுக்கணும் 
  • வைகாசி விசாகம் 
  • சித்ரா பௌர்ணமி 
  • பங்குனி உத்திரம் 
  • மாசி மகம் 
  • தை கிருத்திகை 
  • தை பூசம் 
  • தை வெள்ளி 
  • தை பொங்கல்
  • வெள்ளி கிழமை அம்மனுக்கு 
  • சனிக்கிழமை நவகிரக வழிபாடு
  • ஞாயிறு சூரியன் வழிபடு
  • திங்கள் சுக்ரன் வழிபாடு
  • செவ்வாய் கிழமை துர்க்கைக்கு இராகு கால வழிபாடு 
  • வியாழன் குரு பகவான்/ தக்ஷிணா மூர்த்தி/ சாய் பாபா வழிபாடு
  • பௌர்ணமி விசேஷம்
  • பிரதோஷம் 
  • சங்கடற சதுர்த்தி 
  • இராகு காலம், யம கண்டத்துல கிளம்பக்கூடாது நல்ல விஷயம் ஆரம்பிக்க கூடாது 
  • குளிகை, முகுர்த்தம், வாஸ்து நாள் பாத்து நல்லது பண்ணனும்
  • ஞாயிறு ஏசுக்கான நாள் கண்டிப்பா சர்ச்சுக்கு போகணும்
  • ஆறு வேளை தொழுகணும்
  • ஆண்கள் வெள்ளிக்கிழமை மசூதிக்கு போகணும்


மேல பாக்குற லிஸ்ட் ட்ரைலர் தான், ஒவ்வொரு சாதில, ஒவ்வொரு சாதி பிரிவுல, ஒவ்வொரு குடும்பத்துல இந்த விழாக்கள் கூடும் குறையும் ஆனா மதம் தான் நல்லது கெட்டத  மொத்ததுல முடிவு பண்ணுது.  

    இல்ல இல்ல அந்த மத நம்பிக்கையின் படி நடக்க சொல்றவங்க தான் அத தீர்மானிக்கிறாங்க. யாருடா அவங்கனு பாத்த... அப்பா அம்மா இல்ல கூட பொறந்தவங்க இல்லனா பக்கத்து வீட்டுல வயசுல மூத்தவங்க இல்ல அன்பானவங்கனு இருப்பாங்க.  மேல பாத்த பழக்க வழக்கம் எல்லாம் புக்ல எழுதி வச்சு வர்ரது இல்ல வாய்  வழி சேதியா கேட்டு நம்பி நாம நம்ம வழக்கத்துல கொண்டு வர்றோம்.


    வெளிச்சம் கொடுக்க பல்பு (ஸ்மார்ட்டா) இருந்தாலும் விளக்கு ஏத்தறதும்; பொணம் வைக்க பிரீசர் பாக்ஸ் கொண்டுபோக சொர்க ரதம் இருந்தாலும், பூ தூவி பாடையில பொணத்த எடுத்துட்டு போறது - மதம்,  நம்ம புத்திக்கு தெரியாம ஏழைக்கும் பணக்காரனுக்கும் படிச்சவனுக்கும் படிக்காதவனுக்கும் சமத்துவத்த கடைபிடிக்க வைக்குது. கோயிலுக்கு எல்லாரையும் குளிச்சிட்டு வர வைக்குது (தீண்டாமை சாபக்கேடு கண்டிப்பா இருக்கு)

    சாதிக்கு ஒரு சடங்கு ன்றது வேற விஷயம்... ஆனா மதம் கொறஞ்சது நம்மல ஒரு சின்ன பழக்கத்தால பிணைச்சு வைக்குது. அதனாலயே இந்த மத பழக்க வழக்கத்த நம்மலோட கொழந்தைக்கு சின்ன வயசுலயே சொல்லிக் கொடுத்து பழக்கி வச்சிடுறோம்.

    வாழ்க்கைல பிடிப்பு இல்லாம போகும் போது அந்த நிலையான மாற்றத்த கொண்ட சூரியனையும் நிலாவையும் நவகிருஹத்தையும் சார்ந்த மதத்தை கெட்டியமா பிடிச்சிக்கிறோம். வாழ்க்கைல பிடிப்பு இல்லாம போகக்கூடாதுனு சின்ன வயசுலயே மதம் சார்ந்த பழக்க வழக்கத்த கடைபிடிக்கிறோம்.


    வாழ்க்கைல நடக்குற ஒவ்வொரு மாற்றத்துக்கும் மதத்துல ஒரு சடங்கு இருக்கு அது காலையோ மாலையோ பௌர்ணமியோ அமாவாசையோ சூரிய கிரஹணமோ சந்திர கிரஹணமோ பெறப்போ வயசுக்கு வர்றதோ கரு உருவாகிறதோ இல்ல இறப்போ எதுவானாலும் அது மதத்தோட சடங்காயிடுது.

எல்லா மதத்துலயும் இப்படிப்பட்ட சடங்குகள் இருக்கு.

கண்டிப்பா மதம் நம்மல இணைக்குது ஆனா நம்மோளோட போட்டியிடும் குணம் நம்மள புது புது கடவுள் உருவாக்குது புது புது சாங்கியத்த உருவாக்குது. சிலருக்கு கட்டுப்படியாகாத சடங்காவும் மாறுது நம்ம மதம். 

 


Thursday, August 26, 2021

கருப்பும் பயமும்

கிட்ட திட்ட இருபத்தியெட்டு (28) வயசுல ஊரே கொண்டாடுற அந்த கங்கை அம்மனுக்கு (கிடாய் வெட்டி) கூழு ஊத்தும் விசேஷத்துக்கு போயிருந்தேன். 

என்னதான் 

கிழக்குல துலக்கானத்தம்மண் மேற்குல ஏரி கரை அம்மன் 

தெற்குல செங்கழனியம்மன் வடக்குல நல்லாட்சியம்முனு 

இருந்தாலும் இந்த கங்கையம்முனுக்கு இருக்க மவுசு தனிதான்.


இந்த விழாலதான், இயற்கை வழி உணவு உண்ணும் இருளர் மக்களும் பறை கொட்டி பல சேதி சொல்லும் மக்களும் ஊருக்கே துணி வெளுத்து தரும் மக்களும் உரிமையோடு பங்கேற்பாங்க.


இருளர் மக்கள், அவங்களோட மயக்கும் மெல்லிய குரல்ல மாரியம்மன வார்ணிச்சு பாடிட்டு இருந்தாங்க. 'அப்பா!'... என்னடா இப்டி பாடுறாங்கனு கொஞ்சம் முன்னாடி வந்து குளக்கரை விளிம்புல நின்னு ரசிக்கும்போது 'டேய்' சாமிக்கு கருப்புனா  பிடிக்காதுன்னு சொல்ல... கருப்பு சட்ட போட்ட நான்  அப்படியே பின்னாடி வந்துட்டன்.


அப்பத்தான் செய்தில  

'இந்த கருப்பு மனிதன் அந்த மாநிற மனிதர்களை கொல்ல தொடுக்கும் வெள்ளையர்களின் போரில் கலந்து கொள்ள மாட்டேன்' ன்ர  'முகமது அலி'யோட வசனத்தை கேட்டேன்.

கருப்பு சட்ட போட்டா... மாநிற மக்கள் கடவுளுக்கு பிடிக்காதுன்னு (கொஞ்சம்) வெளிய போ சொன்னாங்க. அப்ப அந்த வெள்ளை நிற சராசரி மக்கள் மாநிற மக்களையும் கருப்பு நிற மக்களையும் புறக்கணிக்கிறது இயல்பான ஒன்னுதானே?. வித்யாசத்த பாத்து  திகைச்சி தள்ளி நிக்குறது மனித சுபாவம்தான... ஆனாலும் ஒருதத்தர ஒருத்தர் புறக்கணிக்க கூடாது.


அதுஎன்னவோ தெரியல 

துக்க நாள கருப்பு நாள் சொல்றது 

கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறது 

கெட்ட எண்ணம்  கொண்ட ஹேக்கர கருப்பு தொப்பி ஹேக்கர்னு  சொல்றது 

கூட்டத்துல மாறுபடுறவள/ன  கருப்பு ஆடுனு சொல்றது

கருப்பு மாய மந்திரம்னு சொல்றதுன்னு

இப்டி துக்கத்துக்கு, எதிர்ப்புக்கு, கெட்டதுக்கு, மாறுதலுக்கு, மறுத்தலுக்கு, மர்மத்துக்கு கருப்பு ஓர் அடையாளம் ஆயிடிச்சு.


ஆனா, நம்ம ஊர்ல  பல சாமிங்க கருப்போட அடையாளமா இருக்கு 

  • ஐயப்பன் 
  • கருப்பசாமி 
  • முனீஸ்வரன் 
  • காட்டேரி 
  • காளியாத்தா 
  • ஏன்..? சனீஸ்வரன் கூட 

மேல சொன்ன சாமி எல்லாமே காவல் தெய்வங்களா பாக்றோம்.


என்னடா இப்படி நல்லதுக்கு கெட்டதுக்கும் கருப்பு சமமா இருக்கு யோசிச்ச நமக்கு கருப்பு  மேல இருக்க பயம் நியாயம் தான் தோணும் 

ஏன்னா சின்ன வயசுல நாம ரொம்ப பயப்பட்ட விஷயம் இருட்டு.!

  • இருட்டுல தான் பேய் வரும்.
  • இருட்டுல தான் பூச்சி பொட்டு வரும்
  • இருட்டுலதான் திருடன் வருவான்

இப்படி பல நமக்கு எதிரா நடக்கற விஷயம் எல்லாமே இருட்டுல தான் நடக்குது. அந்த இருட்டோட நிறம் கருப்பு. கருப்பு நிற பொருள் எல்லாமே வெளிச்சத்த உள் வாங்கி இருட்ட பரிசா தருது. அதனால அந்த கருப்பு சட்டை மேல இருக்கிற பயம் கருப்பு நிற மக்கள் மேல இருக்கிற பயம் ஒரு இயற்கையானது தான்.


இதே காரணத்துக்காக தான் இன்னைக்கு வரைக்கும் அம்மாவாசை, சூரிய கிரகணம்-சந்திர கிரிகணம் போன்ற வானியல் நிகழ்வுகளை ஒரு கெட்ட சகுனமா பாக்கிறோம்.


அந்த குளக்கரை சம்பவத்திலிருந்து நான் கருப்பு சட்டை போடுறத கொஞ்சம் நிறுத்தியாச்சு, சாமிக்கு பிடிக்காது... அபசகுனம்னு என்ற காரணத்துக்காக இல்ல எதுக்கு மக்களோட உள்ளார்ந்த பயத்தை தூண்டுவானேனு...


சட்டை நிறத்தை மாத்தலாம்  ஆனா மைக்கேல் ஜாக்சன் போல எல்லார்க்கும் தோல் நிறம் மாறாதில்லையா... அதனால மக்களோட தோல் நிறத்தை வச்சி நிராகரிக்கவோ வேற்றுமை படுத்தவோ வேண்டாமே...!


Thursday, July 23, 2020

கருப்பு வெள்ளை ஜோடி

அம்மா-அப்பா கருப்பு-வெள்ளை ஜோடியாக இருந்தா வீடு கொஞ்சம் கலகலப்பாவே இருக்கும். அம்மா வீட்ல இருக்கவங்க எல்லாரும் வெள்ளையா இருந்து அப்பா வீட்ல இருக்கவங்க கருப்பா இருந்தா இன்னும் சுவாரிஸ்யமா இருக்கும்... 

அப்படிபட்ட வீடு தான்  என்னுடையதும். (அதனால அம்மா கருப்பு - அப்பா வெள்ளை ஜோடி பத்தி அனுபவங்கள கேள்விபட்டதில்ல ஆனா பாத்திருக்கேன்). எப்பாவது வீட்டு விஷேத்துல விளையாட்ட கருப்பு வெள்ளை டாபிக் வந்து கருப்பு பக்கம் அழுத்தம் அதிகம் ஆச்சுனா முதல்ல கருப்புக்கு, அப்பாவுக்கு துணை நிக்கிறது  எங்க அம்மா தான். சில நேரத்தில் உறவுகள் கோபத்தில இல்லனா அறியாம கருப்பு நிறத்தவங்கள சுருக்குன்னு பேசினா அதுக்கும் சரியான பதிலடி கொடுக்கறது எங்க அம்மா தான்.

ஒரு நாள் எங்க அம்மாவோட தங்க (சித்தி, தொத்தா) வீட்டுக்கு போகும் போது, எப்பவோமா கிண்டல் பண்ணுற தொத்தா, நான் உள்ள வந்த பிறகு "என்னடா கருப்பா எப்படி இருக்க?"னு கேட்க நான் உடனே "என் தோல் தான் கருப்பு, ஆனா என் மனசு வெள்ளைனு" சொல்லிட்டேன். அதை கேட்ட அம்மா கொஞ்சம் சந்தோஷமும் மிரண்டும் போய் தொத்தாவ பாத்து சிரிக்க, ஆமா... நான் அப்படி கேட்ட இப்படி தான் பதில் சொல்லுவான் சொல்லிகிட்டே வொயிட் காஃபி போட போனாங்க.


இந்த சம்பவம் நடந்து கொஞ்ச நாள் கழிச்சு எங்க அம்மா எப்பவும் போல, பேப்பர் படிச்சுட்டு, படிக்கும் போது  போடுற கண்ணாடிய தையில் மெஷின் மேல வச்சிட்டு, அவங்க படிச்ச மார்ட்டின் லூதர் கிங், கதைய சொன்னாங்க...

அதில வந்த சம்பவங்கள்  என் மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சி... எப்படி அந்த வெள்ளை நிற குழந்தைகள் கருப்பு நிற குழந்தைகள நிராகரிச்சாங்க, பஸ்ல சீட்டு காலியா இருந்தும் கருப்பு நிறத்தவங்கள எப்படி உட்காரவிடல அப்டி மறந்து உட்காந்தவங்கள ஓடுற பஸ்ல இருந்து தூக்கி எரிஞ்சாங்க, கல்லூரில, சமுதாயத்துல கருப்பு நிறத்தவங்கள எப்படி ஒதுக்குனாங்கனு பல சம்பவங்கள் இப்பவும் வந்து போகும்.


இத விட,கருப்பு நிறத்தவங்கள அடிமை படுத்தி வேலை வாங்கும்போது அடிக்கடி தப்பிக்கற அடிமைகள நிறுத்தி வைக்க, அவங்க பிள்ளைங்க கழுத்துல சுருக்கு மாட்டி அந்த சுருக்கு கயிறோட முனைய தந்தை காலுல கட்டிடுவாங்க, இப்டி குழந்தையோட மரண பயத்தை வச்சு வேலை வாங்கினது ஆழமா பதிஞ்சுடுச்சி.

இப்படி பட்ட 
சவால்ல மார்ட்டி வென்றத நினச்சா எப்போமா ஒரு உற்சாகம் வருது.

எங்க அம்மா சொன்ன கதை என்ன எப்போவுமே நிற வேறுபாடு மத்தியில தல நிமிர்ந்து நடக்க செய்யுது.

Thursday, December 10, 2015

Only Marks doesn't save people




What happened to these academic wings

Scout and Guides

JRC

NCC

NSS

Dear media when  10th and 12th results are getting released you throng the schools like flies over ripened fruit and create a big HUM for that week. You create a virtual race and you figure out doctors and methods to reduce the social pressure, and psychological pressure on students. Does your camera lenses only magnifies the mark scoring faces, it doesn't have enough resolution to identify inefficacy of above mentioned  academic wings.

In the recent rescue operations in Chennai flood, I have not heard any name of those wings getting into operations. You have not tried to capture the pathetic people in those uniforms. Obviously, how can you concentrate on those AMBI guys, your are also from my society right, who thinks that those are only a job earning certification providers. Those are not only meant for Republic Day and Independence Day parades, the power of those wings could have been utilized in this unexpected situations.

Scout and guides could have been used to explore the affected areas and to build tents for the NDRF, army, government officials, and homeless.

NCC could have deployed for regularizing the distribution of donations, assisting army and NDRF.

JRC team could have involved in the medical camps or proactively measured the medical needs of locals.

NSS volunteers could have contacted the villages that they have camped last time to lend out helping hands.

Oh, my dear parents if your colleges and schools have not done the above listed very few basic things, just rethink of morals and values of future money vending children.

Get teamed up for the betterment of our future.


It's not only survival of fittest but the fittest group also.

Monday, November 30, 2015

The Interviews I Failed(2)

#HCL Infosystems Interview#


This is about the one of the finest interviews I have attended. It's about HCL Infosystems Interview procedure. It was an off-campus interview arranged in my college after my failure in Infosys and Hexaware interview. Thank god this was an opportunity to join an electronic business unit of HCL. There are 4 subsidiaries of HCL are into business (http://www.hcl.com/overview).  I surfed over to get all info. It was a fantastic interview until my HR lady probed me with questions, wait, let us slowly go to climax.

Introduction & Morning

As usual before the arrival of interviewing team I was in the hall with well ironed blue shirt and black pant. The interview team invaded the hall and left the silence as the sign of victory over our interview fear. They gave a humble and brief introduction about HCL enterprise. They beautified the stage with words and visuals about HCL. 

After the introduction section, they asked us to share few points about HCL that impressed us. Ya, as I was determined to get into the company I grabbed the opportunity to make an impact and impress them. I explained about the 'Intrapreneurship' option in HCL and their 'Employee First' approach. Yes, as I expected I impressed them with data and my articulation. Another one girl explained about the presence of HCL in abroad. They are happy with our interactive discussion.

Then we moved to aptitude...

Written & Noon

Around noon, we gave our aptitude. The written round was a strange one for the people prepared with RS Agarwal. It's fully diagrammatic questions which required basic physics and common sense. As a happy end, most of us got selected (~90/280).


Discussion & Evening

Yes, that girl also selected, who replied the team in the morning. Selected were separated into 6 groups each containing 10 to 12 members.

This one was true group discussion rather than a Spoken English test which will be conducted in HCL B-serve and other technology-based companies. The arbiter clearly told us that he is going look for the confidence and value of the points setting aside the flow rate, accent, and grammar. 

We were given with topic of 'Goods and Bads of Indian Education System'. I was about to open the discussion with an impressive introduction, but one fellow grabbed the momentum and opened up the discussion well. After keep on watching the quick mouths of my group I was the 5th person to join the discussion. That moment onwards whenever I got an opportunity, I stated my points firmly and politely. Finally, I got selected out of 40+.

That girl was not selected and she was in the group to which my bestie belongs to. My bestie told that she spoke well but gave wrong data over atom bombs.

Face to Face & Night

Everyone was hurrying through their technical books. The total room was in chaos. 'Hey, check the equation of second order differential equations' my another department buddy requested me. I said 'why you need it'. I replied 'They are asking it and they also asked the equation of a point, a line, a circle, and movement of  flying mosquito'. He added 'Even they are asking are you in love'. After all this nauseating comments, I immersed my head in a micro-controller book in order calm my nerves.

My turn, I went inside smiled them and got a welcoming smile. They said 'Please take your seat'. I sat comfortably by keeping my arms over the chair handles and slightly stretching myself against the chair then I handed over my resume to them. I introduced myself (with eye contacts) as I rehearsed. I explained my atmega8 microcontroller based project very well (Harvard Architecture, and a fine justification for sensors I used) as I prepared. They satisfied with my technical knowledge.

Billion Dollar HR Questions

A lady interviewer (HR), started to fire me with, 'Why you want to join HCL'. I replied 'I did research and found it as a good one... and... my senior who worked HCL also recommended me'[1a]. Then she probed more on my guru 'What was his position?'. I answered 'He was a java programmer at HCL'

She turned to my brother from the introduction of myself, and questioned 'What is your brother'. I said 'SQL programmer in so&so'. She hit back me with next question 'How long you will stay in HCL if selected'. I was joyous with the positive question I got, without any hesitation and condition I said 'I think 4 years'. She asked 'How can you be so sure'. 'HCL is good company and I will get a good opportunity so I can stay up to 4 years'. A blunder mistake I have not thought of appraisal problems or any other at that time and gave an absolute number.

Finally, she hit the hammer on my head, 'How can I be sure that you will not leave the company if you're brother offers a referral in a better company'. I started to think as I have not expected this kind of situation in future. At last to grip the opportunity I said, 'Decision over the job is mine... brother's suggestion will be next... and I hope HCL will provide good environment'.

Successfully Failed

At last just a few tens of minutes to midnight, they announced the result, am not selected yet my bestie got selected thank god at least he was into HCL from my class.

FOOTNOTES

Do preparation for all the rounds. Visualize real-time problems and your response to it. Be firm with your answers in HR round with your past actions to support your decision or explain your decision and the factors you considered in making decisions.

In GD always try to extend the discussion within the topic. Give real-time examples. Make sure that you don't interrupt others or raise your voice. Just state the pros and cons of a given topic but make it firm and polite. Even if you're telling one point only, make sure that it reaches all.